freelancing writer

My photo
Am Freelance in any Area !

Saturday, October 20, 2018

மெர்சல் - ஆர்பாட்டமா? வரவேற்ப்பா?




ஒரு திரைப்படம் இன்று இந்திய ஊடகங்களின் பக்கம் திரும்பி இருக்கிறது என்றால் காரணம் என்ன? காரணி யார்?
அட்லி ஒரு தனியார் ஊடகத்தில் மெர்சல் திரைப்படம் முன்னோட்டம் போது, "இந்த படத்துல வர ஒரு சீன பத்தி தமிழ்நாடே பேசும்” என்று பதிவிட்டதின் நோக்கம் என்ன? திரைப்படத்தின் வசனம் கதாநாயகனுக்கு தெரியும், தெரிந்தே அதை மாற்றாமல் நடித்ததிற்கு நோக்கம் என்ன?
நல்ல திரைப்படங்களை திருத்தம் என்ற பெயரில் அடையாள குறியீடு அளித்து அசிங்க படுத்தும் தனிக்கை குழிவினர் அந்த காட்சியை கண்டு திருத்தாமல் வைத்ததற்கு காரணம் என்ன?
ரசிகர்கள் மட்டும் போற்றாமல் தேவை இல்லாமல் தூற்றும் இதர ரசிகர்கள் மத்தியிலும் அந்த காட்சிக்கு புகழ் பெற்று வரவேற்கப்பட்டது. ஏன்? இதுவரை கண்டு கொள்ளாத இந்திய ஊடகங்கள் இந்துவத்துவ வாதிகளின் கருத்தின் பிறகே தலையில் தூக்கி கொண்டதின் அரசியல் என்ன?
ஐம்பது ரூபாய் டிக்கெட் ஐ 150 ரூ கொடுத்து வாங்கி எதுவும் பேசாமல் திரைப்படம் பார்க்கும் அன்றாட மக்களின் எண்ணங்கள் என்ன? இவ்ளோ கேள்வி மட்டும் இல்லாம பல கேள்விகள் இந்த திரைப்படத்தை சுத்தி வருது! “ஆளப்போறான் தமிழன்” னு பாட்டு விட்டதுல இருந்து, கடைசியா விஜய் முதல்வர சந்திச்சது வரை என்ன போயிட்டு இருக்கு.
தற்கால நிகழ்வ பேசுனா திரைப்படத்திற்கு மேலும் கெடுபிடியும், பேசலனா உதவாத கலை எனவும் பேச தெரிந்தவர்கள் தான் மிச்சம். ஏன் இவ்ளோ கெடுபிடி , கேளிக்கை வரியை குறைக்கிறதுக்கு மக்களும் ஏன் கேக்கல! ஆம, இவிங்க திரைப்படத்தை விமர்சிக்கவும். தயாரிப்பாளர விட இவங்க தான் வசூல் பத்தி யோசிச்சு பெருமை படுறதும், இருந்த என்ன ஆகும். இத கூட பொருத்துக்கலாம். திரைப்பட காட்சியை சாதியவாதிகள் சாதியோடு ஒப்பிடுவதுலாம் கவலைகிடம். “உண்மைய சொன்ன கோவம் வரும்” இந்த வசனம் திரைப்படத்துல யாரும் கவனிக்கல போல,  நம்ம டாக்டர் அக்காக்கும், தெய்வ திருமகன் எச்.க்கும் ஏன் கோவம் வந்துச்சு!
திரைப்படத்த விமர்சிக்கும் போது அதுமட்டும் விமர்சிக்காம ஒரு நடிகரோட திருமணத்த பத்தியும், அவரோட மதத்த பத்தியும் விமர்சிக்குறது கேவலமான செயல். 
2G ஊழல் பத்தி பேசாத இவங்க, ஜோக்கர் படத்த பத்தி பேசாத இவங்க, இப்ப மட்டும் ஏன் பேசுறாங்க. ஏன்னா GST இவங்களோடது, குஜராத் ல முதலமைச்சரா இருந்த போது GST ய எதிர்த்து கருத்து சொன்ன இவங்க, ஒரு திரைப்படம் கருத்து சொன்னா என்ன?
அரசியலையும் திரைப்படத்தையும் ஒன்னா சேர்த்து புகழ்பெற்ற தமிழ்நாட்டுக்கே இந்த கதியா?
இல்ல கிருத்துவ நடிகர் படம்னால எதிர்க்குறாங்களா? “அரசியல் பேசாதே! இது சுதந்திர நாடு” தாரக மந்திரம் அட போங்கய்யா!இந்த நிகழ்வுலிருந்து திரைப்படங்களுக்கு சுதந்திரம் இல்லனு தெரியுது.. இதபத்தி விமர்சிக்காம அரசியல் வாதிகள் அதற்கான தீர்வுகளை செய்து முடிக்கலாம்

விஜய் தேசிங்

Thursday, October 18, 2018

அம்மணத்தை வருடிடும் சீலை




தீர்க்கமான வியர்வை குளியளிட்டு
நாவறண்டு மெதுவாய் சுத்தி சுழலும் விசிறியின் தலை கீழே விழுந்தோம்.
அம்மணமாய் ஒட்டி உளரும் ஈரமெல்லாம்,
இது நீளாதோ? என வினவிய பொழுதுகள்,
அவளின் மெல்லிய சீலை என் தொடை முதல் மார்பறை வரை மூட,
கூந்தல் கொண்டு வெட்கம் மறைத்தாள், என் தேவதை!
'இரவு மிருகம் காமம்' என்பானம் அந்த கவிஞன்,
இரவு ஒரு மேகக்கூண்டு,
அதில் தழலாய் காமம் ஏற்றி
ஒளி மங்கி உறவாடுகிறது காதல்! என்கிறேன்.
நேரம் முடிந்தது, என எழுந்து நின்று
நித்தமாய் ரசித்த பொழுதில்
கட்டிலின் கீழ் வீசிய தன் உள்ளாடையை
இடது காலல் வழித்தெடுத்து
'அவன் பார்க்கிறான்' என்று வெட்கத்தில் மறைந்தோடி அணிந்தாள்!
கடிகாரத்தை தலை தூக்கி பார்த்து விட்டு
தன் சீலையை அழகாக ஒதுக்கி கொண்டு,
அவள் கைப்பையில் வைத்திருந்த குங்குமத்தை
வரி வழி விழுந்து கிடந்த குழல் கோட்டின் இறுதியில்
வேகத்தடை போல் சிவப்பிட்டாள்.
என் மணி பர்ஸில் இரண்டாயிரம் ரூபாய் எடுத்து கொண்டு
கதவோரம் இதழ் சிரித்து
குழல் ஒதுக்கி சென்று விட்டாள்,
என் மணி நேர காதலி!!!

- விஜய் தேசிங்

Tuesday, October 16, 2018

மறுமணமாகாதவள்


"ஓர் அறையில் நாமிட்ட பல சண்டைகளின் முற்று ,
இனி நான்கு கால்களில் அரியணை ஏற வேண்டும்!
நீ ஏற்றிய இடை கைகளை விலக்கி
மஞ்சனையில் எனை வீழ்த்தி
விழுந்து விட வேண்டும்
உடன் நீ வேண்டும்!
என் எடை உணர்ந்து உலுக்கிய கட்டிலின் வாசம்
என் கூந்தல் அறிய வேண்டும்!
உன் மீசை ருசியரிய கழுத்தோர மச்சங்களும் ஏங்கி விட வேண்டும்,
இசைகளின் விருச்சமாய் என் முனுங்களும் முந்த வேண்டும்
என் இதய ஓசையை உன் மார்பில் இசைத்திட வேண்டும்,
துச்சாதனனாய் நீ மாற வேண்டாம்,
துயில் உரிந்த பிறகு.
ராச்சதனாய் நான் மாறுவேனா,
என் நக கீறலில் உதிர வீச்சின் பிறகு.....
கால்கள் உடைய கால்கள் சேர்த்திட வேண்டும்,
விழுந்து விட வேண்டும்
இந்த இரவின் கோர கனவிலிருந்து மறுமணமாகாத என்னை  எழுப்பிட
பகலே உடனே நீ வேண்டும்!!! "

- விஜய் தேசிங்

நகர கால்களே

காற்றை கிழித்து வரும் பூச்சிகளின் ஓசை! 
தூசு தும்பு படியேறி பயணித்து 
பச்சை கசக்கி மூக்கில் ஏறி
சித்தம் இடித்து போனது

வாஞ்சை கொண்ட என் கால்கள்
அன்று பாதணிகளை கழட்டி நடக்க ஆரம்பித்தது.

நண்பனுக்கு கடித்த அட்டைப்பூச்சி பற்றியும் கவலைபடவில்லை என் கால்கள், 
காப்பி தோட்ட சில்லை 
விழுந்து கிடந்த இடமெல்லாம் ஆர்வமும் எழுந்தது.

தூரத்தில் காட்டப்படும் பறவைக்கெல்லாம் தெரியாது. 
நானும் வேறு மாநில பறவை என்று

ஒருவேளை தெரிந்திருக்கக் கூடுமோ? 
அதனாலே என் பார்வையிலிருந்து பறந்தன.

சுற்றி திரியும் ஓசைகளை கூட்டி இழுத்து
போற்றி வைத்தது காற்று. 
அடடா தவறவிட்டோமே என எண்ணி நகைத்து மீண்டும் பயணிக்கிறேன் 
இயந்திர சப்தங்களை கேட்க!

- விஜய் தேசிங்

சுருண்டி இருந்த ஆணுறை


ஒன்றிய வீட்டோடு ஒட்டி
ஓடிட்ட வீடாய் இருந்தது என் வீடு,
கணவனோ, புகைபடமாய் செவிற்றில் அடிக்கபட்டு இருக்கிறான்.
ஊதுபத்தி வாசம், மலர் பிதுங்கி
புகையாய் வழிந்தது.
காய்ந்த பூக்கள் உதிர்ந்த நிலையில்
புகைபடத்தில் ஒரு புறமாய் தொங்கி கிடக்கின்றன.‌
வீட்டில் புத்தகத்திற்காக ஒதுக்கப்பட்ட
ஒரு அறை இருக்கும்.‌
ஒரு ஆள் நிற்கும் அளவு இடம் இருக்கும்.
அவனோடு நானிருந்த பொழுது
என் கால்கள் இடித்து
புத்தக அடுமணை அலுங்கி விழுந்தது.
அதில் பெண்ணுரிமை, சுய மரியாதையெல்லாம் சரிந்து விழுந்தது.
அவனை அனுப்பி விட்டு,
கணவன் முன் வைத்த இரண்டாயிரம் ரூபாய் கட்டு மெதுவாய் பிரிந்தது.
அந்த நேரமே, கதவு வழி சப்தம்,
பள்ளி முடிந்து சென்று வந்த பிள்ளையின் ஆனந்த வருகை, 
'அம்மா பசிக்குது' என்றான்.
சோறு பரிமாறி, குப்பை கொட்டி விட சென்றேன்!
இன்று அந்த மேலறயை,
சுத்தம் செய்து விட்டேன்,
அன்று அவன் தவற விட்ட ஆணுறையின் சுருளை,
'அம்மா ஊதி கொடுமா' என்ற கேள்விக்கு
இரத்தம் உறையா வலியுணர்ந்தேன்!
என்றைக்கு  அவனுக்கு விடை தெரியுமோ,

 அன்றைக்கு குப்பை கூளங்களாய் மாறாமல் இறந்துவிட தோன்றியது.‌

- விஜய் தேசிங்

Saturday, October 13, 2018

தூமை துணி


இரண்டு குடகு பாதை இடையே போர்த்தப்பட்டிருந்த
உள்ளாடையின் விரும்பி நான்!
தாயின் பயம் கலந்த பொத்தடைப்பிற்கு ஆளான
நூற் வானம் நான்!
ஈரமான போதும், வழிந்து விட்டதா,
அல்லது விலகி விட்டதா என அவள் கண்கள் பதற்றும்
ஓரங்க தோழி நான்!
செங்கதிர் சூடடங்கி பொங்கிடும் செக்க சிவப்பெல்லாம் கக்கி 

கசிந்திட்ட  யோனியின் மறை போர்வை நான்!
ஆதிக்க மகுடத்தின் மூன்று நாள் உயிர் பூச்சி நான்!
சமயங்களில் சிக்கி நூலுக்கு பயந்திட்ட நூலாடை நான்!
முலை பெருக்காத சமயங்களில்
மூலையில் முடங்கிய முதிராத குணம் கொண்டவளின் மூகம் நான்!
துணியாத பெண்டிர் சமூகத்திடம் ஓய்வு பெறா தூமை துணி நான்!

- விஜய் தேசிங்

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல.. - மருது சகோதரர்கள் வீழ்த்தப்பட்ட கதை

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல..  என்ற வரலாறு ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி துரோகத்தால் வீழ்த்தப்பட்ட ம...