சில நாள் பிறகு, அழுக்கு சட்டைகளை தோண்டி எடுத்து ,
பல வண்ண துணிகளில் இது எனதா? இல்லை நண்பனதா என்று யோசித்து
இறுதியில் இது நமது என முடிவுக்கு வந்து,
அதில் வெள்ளை விழாமல்! வாசனை வராமல் பார்த்து பக்குவப்படுத்தி,
பல்கலைகழகத்திற்கு புறப்படும் போது, கையிருப்பில் ஒரு ரூபாய் வைக்க வில்லை!
வார இறுதியில் இது முன்பே தெரிந்திருந்தால் ஒரு புகை சுருளை குறைத்திருப்பேன்!
விடுதியில் இருப்பவருக்கு தெரியும் அம்மாவின் பத்து ரூபாயும் அரிதென்று!
டீ கடையில் தேனீருக்கும் காசில்லை! கடனை தாண்டி தர சேட்டா-வுக்கும் மனதில்லை!
எதோ ஒரு ஞாபகத்தில் சட்டை பையில் கை துளவிய போது இருந்தது,
கசங்கி மடிந்த சிறு கிளிசல் கொண்ட ரூபாய்!
ஊரிலிருந்து வரும் போது எத்து பள்ளு அண்ணாச்சி கடையின் செலவு மிச்சம்
பத்து ரூபாய்!
Friday, July 20, 2018
பத்து ரூபாய்
Subscribe to:
Post Comments (Atom)
துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல.. - மருது சகோதரர்கள் வீழ்த்தப்பட்ட கதை
துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல.. என்ற வரலாறு ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி துரோகத்தால் வீழ்த்தப்பட்ட ம...
-
இன்றைய காலக்கட்டத்தில் பாசிசம் என்பது இந்தியாவில் பல இடங்களில் மறைமுகமாகவும், சில இடங்களில் நேரடியாகவும் செயல்பட்டு வருகிறத...
-
படத்தின் போஸ்டர் வீட்டு வேலைக்காரியான திலகத்தை (ஷோபா) அந்த வீட்டின் உரிமையாளரான வெங்கடாசலம் (சந்திரபாபு) ஏமாற...
-
காற்றை கிழித்து வரும் பூச்சிகளின் ஓசை! தூசு தும்பு படியேறி பயணித்து பச்சை கசக்கி மூக்கில் ஏறி சித்தம் இடித்து போனது வாஞ்சை ...

அழகான ஒரு பதிவு 💓
ReplyDeleteநன்றி!
Delete