திருவண்ணாமலை நண்பனின் ஊருக்கு சென்ற அனுபவம் கவிதை நடையில்....
#அதிகாலையிலே வயலை நோக்கி சென்ற பட்டனத்து ரயில்!
சின்ன வரப்பு மேல சில் வண்டு மேய்ந்தது போல வரிசையாக சென்றோம்!
மறதி ஒரு சொர்க்கமடா! அன்று செருப்பு போடாமல் சென்று விட்டேன்!
நுனி புள்ளில் பனி படுத்து தூங்கும்
தெரிந்தே மிதித்தெடுத்த சென்ற போது!
செங்கதிர் முகத்தில் பட்டு செக்க சிவந்ததென்ன முகம்!
அடியாத்தி அன்று என் தோழியும் அழகாக தெரிந்தால்!
சூரியனுக்கு மேற்க்காயில மலைகளின் மத்தியிலே,
வாய் பொளந்து நின்றதம்மா, வற்றாத ஊற்று கிணறு !
வரவேற்றது!
பசும் பால் பீச்சும் சப்தமும், தூரத்தில் முப்பாத்தம்மா கோயில் பாடலும்,
சேவ கூட காகமும்
சேத்து வெச்ச சங்கீதமம்மா
கேட்டேன்!
நீச்சல் தெரிந்த நண்பனெல்லாம்
தொபுக்கென குதிக்க, நான் மட்டும் படியில் இறங்கினேன்,
முன்பு சென்றவரின் ஈர கால் குளிர்ச்சி
சில்லென குத்தி கிழித்தது, என் பாதங்களை!
நுனி விரல் பட்டு மயிர் கூச்சரிந்த பின் சிறு நடுக்கத்துடன் இறங்கினேன்!
கிணற்றோர தரையிலே தவளை போல் மிதந்தோம் வரிசையாக!
பற்கள் அசை போடுவதற்கு பதில் இசை போட்டது அன்றுதான்!
அடி வயிறு கலற தொடங்கியது; முங்கென முங்கினேன்!
பச்சையான நீர் நிலை! கண் இடையே சிறு தாவரமும் மிதந்தன!
சிறு குமிழி காலம் போல் உடனே எழுந்து விட்டேன்!
உயிர் பயம் ஒருபுறம் இருக்க , நண்பனின் கரங்களை ஒரு புறம் இறுக்கினேன்!
முழுவதும் நனைந்தபடி ஏறினேன்!
முழுவதும் நனைந்து படிகளில் ஏறினேன்!
உடலிலிருந்து விட்ட நீரல்லாம் ஆடை நூல் வழியே சொட்டுகிறது!
தலையில் சட்டென கொட்டும் ஷவரிலிருந்ததை விட,
அழுக்கான வாய் பிளந்த நண்பன் சிறந்தவன்!
இன்று நான் நாகரீக கூண்டுக்கு புறப்படுகிறேன்
போய் வரவா கிணறே
போய் வரவா?

No comments:
Post a Comment