freelancing writer

My photo
Am Freelance in any Area !

Monday, April 13, 2020

இறப்பதற்குள் பார்க்க வேண்டிய படம் - ஈரானிய இயக்குனர். மஜீத் மஜிதி




இன்று வெளிவரும் படங்களில் குழந்தைகளின் உணர்வுகளையும் அவர்கள் பார்வையில் சமூகம் எவ்வாறு உள்ளது என்பதை பற்றி சில படங்களே வந்துள்ளது. அந்த வகையில் எனக்கு இன்னும் மனதில் இருக்கும் பாண்டி ராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க , ராம் இயக்கத்தில் வெளியான தங்கமீன்கள், மணிரத்தினம் அவர்களின் அஞ்சலி மற்றும் சில
இப்படி சொல்லி கொண்டு போகலாம். இந்த உணர்வுகளை மேல் நாட்டு படங்கள் எப்போதாவது மட்டுமே தந்து செல்கின்றன. பெரும்பாலும் அனிமேஷன் வகையில் குழந்தைகளின் மனநிலையை சொல்லும் கதையை படமாக எடுத்து விட்டு செல்வார்.

(சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த ஜோஜோ ராபிட் திரைப்படம் ஒரு வரலாற்று ரீதியான பல தகவல்களை ஒரு குழந்தையின் பார்வையில் இருந்து சொல்லியது என் மனதில் நெருக்கமானவையாக இருந்தது)

இப்படி குழந்தைகளுக்கும் ஒரு உலகம் அதில் யார் வில்லன் யார் ஹீரோ யார் குணசித்திர நடிகர் என்பது அவர்களுக்கு மட்டும் தெரிந்தது.
ஆனால் ஒரு அதிசயம் அந்த ரகசியங்கள் இன்னொருவருக்கும் தெரிந்திருக்கிறது. அவர் அதில் கெட்டிக்காரர், குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பல அறிவுரைகளை சொல்லி கொண்டு இருப்பவர். சொல்லப் போனால் குழந்தைகளை வைத்து பெரியவர்களுக்கு அறிவுரை கூற வைக்கும், நம்ம ஊரு சமுத்திரகனி அண்ணன் போல, அவர் இயக்கிய ‘CHILDREN OF HEAVEN’ என்ற படத்தை பற்றியே இந்த கட்டுரை.


மஜீத் மஜிதி, இவர் ஈரான் நாட்டை சேர்ந்த ஒரு ஏழை குடும்பத்தில் மகனாக பிறந்தார், பள்ளிபருவத்திலே தந்தையை இறந்ததால் இவரை வறுமை  வாட்டி எடுத்தது. பின் குடும்ப பாரம் சிறு வயதிலே தன் தலை மேல் விழுந்தது. கடுமையாக உழைத்தார் மஜீத் மஜிதி. படிப்பின் மீது  இருந்த ஆர்வத்தினால் அவர் பள்ளிக்கூடம் நேரம் முடிந்ததும், இனிப்பு பண்டங்கள், ஐஸ் க்ரீம் விற்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் ஐஸ் க்ரீம் வியாபாரமும் படுத்து போக, 14 வயதில் நாடக குழுக்களுடன் இணைந்து மேடை ஏறி நடிக்க தொடங்கினார். இந்த முடிவும் வறுமை எடுத்தது தான்.
பின் நாடகத்தில் ஈர்ப்பு வர தொடங்கியது, அதை முழுமையாக கற்று கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் நாடக கலைக் கழகத்தில் சேர்ந்து படித்து பட்டமும் பெற்றார். பின் ஈரானில் கால மாற்றத்தாலும், அரசியல் புரட்சியினாலும் சினிமா வளர ஆரம்பித்தது, அதனால் மஜீத் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்கள் நடிக்க சென்று விட்டார்.
அப்படி நடித்த படங்களில் ஒன்று தான், ‘பாய்காட் இது ஈரானில் தலை சிறந்த இயக்குனர் ஆனா மொசான் மேக்பல்பப்பின் இயக்கத்தில் வெளியான படம் என்பது குறிப்பிட தக்கது.


(மொசான் மேக் பல்ப்பின் கட்டுரை முன்பு பதிவு செய்துள்ளேன். நேரமிருப்பின் தவறாமல் அதையும் படியுங்கள்)

நடிப்பு மட்டும் மஜீத் க்கு தீனி போட வில்லை, நேரம் கிடைக்கும் போது குறும்படங்கள், ஆவணப்படங்கள் என இவரே இயக்கி வெளியிட்டு வந்தார். பின் 1992 ல் ‘பாதக் (BADAK) என்ற முழுநீளத் திரைப்படத்தை முதன் முதலில் இயக்கினார். அதன் பின் பல திரைப்படங்கள் எடுத்தார். அதில் மிக சிறந்த படமாக இன்று வரை குறிப்பிடப்படும் படமாக 1997 ல் வெளியான ‘CHILDREN OF HEAVEN’ என்ற குழந்தைகள் கதைக்களம் கொண்ட படம் தான்.
இந்த படம் அலி என்ற அண்ணன், சாரா என்ற தங்கை என்ற இருவரை சுற்றி அமைந்த கதைக் கரு கொண்டது. இந்த படம் பல நாடுகளில் பல திரைப்பட ஆவலர்களால் கொண்டாடப்பட்ட திரைப்படம். இது மஜீத் ன் தனித்துவமான திறமையை வெளி கொண்டு வந்தது. இந்த படம் சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டது. இவை ஆஸ்கார் வாங்கவில்லை என்றாலும் முதன் முதலில் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் ஈரானிய திரைப்படம் என்ற பெருமையை பெற்றது.


நீங்கள் இறப்பதற்குள் ஒரு சில படங்களை பார்த்தே ஆக வேண்டும் என்று உலக சினிமா விமர்சகர்களிடம் கேட்டால் அவர் பரிந்துரை செய்யப்படும் 10 படங்களில் ஒன்றாக ‘CHILDREN OF HEAVEN’ இருக்கும்.


இது போன்ற படங்களை பார்ப்பதினால் ஒரு நல்ல விமர்சகர் ஆகிறோமோ இல்லையோ ஒரு நல்ல ரசிகனாக மாறலாம். என்னையும் ஒரு ரசிகனாக மாற்றிய மஜீத் மஜிதி அவர்களை நினைவுகோருவோம்.



- விஜய் தேசிங்
9884112420
vijaydesing555@gmail.com

Sunday, April 12, 2020

நான் கறுப்பின பெண் அதனால் என்ன? - ஊடக அரசி. ஒப்ரா வின்ப்ரே





ஏன் இப்போது இந்த கறுப்பின பெண்ணை பற்றி படிக்க வேண்டும். வரலாற்றில் இடம் பெரும் அளவு இந்த பெண் அப்படி என்ன செய்துள்ளார்?
.
.
திருமணமாகாத கறுப்பின இளம் பெண்ணின் மகளாக 1954 ல் அமெரிக்காவில் பிறந்தவர் ஒப்ரா வின்பிரே,
தாயின் நடத்தை சரியில்லாததால் தன் பாட்டியின் வளர்ப்பில் வளர நேரிட்டது. குழந்தையாக இருக்கும்போதே அப்பாவுக்கும் அம்மாவுக்கும் விவகாரத்து,அதனால் அப்பாவிடம் சிறிது நாள், அம்மாவிடம் சிறிது நாள் என வாழ்க்கை பந்தாடியது இவளை.
சிறு வயதில் வறுமை, அந்த சூழ்நிலையிலும் தன் 9 வயதில் உறவினர் ஒருவரால் பாலியல் கொடுமைக்கு ஆளானார்.

அதன் பின் 14 வயதில் திருமணம் ஆகமால் தன் நண்பன் ஒருவனால் குழந்தை பெற்றார். அந்த குழந்தையும் ஒரு சூழ்நிலையில் பறிகொடுத்தார். ஒரு நாள் அம்மாவின் நடத்தை சகிக்க முடியாமல் 200 டாலர்கள் திருடிக் கொண்டு வீட்டை விட்டு ஓடினார். அதன் பின் தன் அப்பாவிடம் இருந்தே படிக்க தொடங்கினார்.
ஒரு புறம் வறுமை மறுபுறம் உளவியல் ரீதியான ஏற்ற தாழ்வு, இன்னொரு புறம் பாலியல் கொடுமைகள் இதனிடையே ஒப்ரா பலரால் பேசப்பட்டார்.
ஆம், ஒப்ரா சிறந்த பேச்சாளர், சிறு வயதில் இருந்தே பேச்சு திறமையில் தன் ஊரிலும், தான் படித்த பள்ளி கூடத்திலும் பேச்சாளராக வலம் வந்தவர், சிறு வயதில் பேச ஆள் இல்லாமல் பறவை, விலங்கு, கரப்பான் பூச்சியிடமும் பேசி  வளர்ந்தவர், இவர் பேச்சு, பள்ளி கூடத்தில் பல பரிசுகளை பெற்று தந்தது.
எப்படி பேச்சில் திறமை வாய்ந்தவராய் திகழ்ந்தாரோ, அதே போல் படிப்பிலும் ஆர்வம் உள்ளவராய் திகழ்ந்தார். இதுவரை, நிறத்தாலும், இடத்தாலும், இனத்தாலும், ஏழ்மையினாலும் பல இடங்களில் அவமானத்தை சந்தித்த ஒப்ரா, இதனை படிப்பால் மட்டுமே ஈடு செய்ய முடியும் என்று நம்பி படிப்பை முன் நிறுத்தி தீவிரமாக படிக்க ஆரம்பித்தார்.
பள்ளி காலத்திலே பேச்சு திறமையால் ஒரு வானொலி நிலையத்தில் பகுதி நேர செய்தி வாசிப்பாளராக சேர்ந்தார், வாரம் 100 டாலர் சம்பளம் அவரது வறுமையை போக்கி வாழ்க்கையை நகர்த்த உதவியது.  

அந்த காலத்தில் கறுப்பின மக்கள் பொருளாதாரத்திலும், சமூக இடத்திலும் ஏழ்மைகள், அதனால் பள்ளி படிப்பை தாண்டுவதே அரிதாக பார்க்கப்பட்ட வேளையில், டென்னசி மாநில கல்லூரியில் சேர்ந்தார். அதே வேளையில் கல்வி செலவுக்காக சில அழகி போட்டிகளிலும் கலந்து கொண்டார், அதன் மூலம் மேடை பயத்தை போக்கி கொண்டார். அது காலப்போக்கில் நடிப்பு திறமையும் வெளி கொண்டு வர ஒரு ஊக்கி யாக இருந்தது.

1972 ம் ஆண்டில் டென்னசி மாநில அழகியாக தேர்வு பெற்றார். பின் 1973 ல் உள்ளூர் தொலைக்கட்சியில் துணை செய்தி வாசிப்பாளரக சேர்ந்தார்.
ஒரு கட்டத்தில் இவரது முட்டை கண், சப்பை மூக்கு, கருப்பு நிறம் விமர்சனமாக பேசப்பட்டு சில சிகிச்சையும் செய்ய தொடங்கினார், இதனால் இவருக்கு முடி கொட்ட தொடங்கியது. பின் 1984 ல் ஏ.எம் சிக்காக்கோ வில் சேர்ந்தார். பொதுவாகவே அந்த காலத்தில் சிக்காக்கோ நிறவெறிக்கு பேர் போன ஊர், ஆனால் ஒப்ரா வின் நிகழ்ச்சி அந்த நிறவெறியை கடந்து வெற்றி பெற்றது.

பின் ஒப்ரா வின் வாழ்வில் நினைத்து பார்க்க கூட முடியாத வாய்ப்பு அவர் வீட்டு கதவை தட்டியது. புகழ்பெற்ற இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ன்
‘தி கலர் பர்பிள்’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு இவரை தேடி வந்தது. அந்த படத்தில் நடித்ததற்கு ஆஸ்கார் சிறந்த துணை நடிகை என்ற பட்டியலில் பரிந்துரை செய்யப்பட்டார். பின் ஹார்ப்போ புரொடக்ஷன் தொடங்கி தானே நிகழ்சிகளை வர்த்தகம் செய்தார்.
பின் இவரது நிகழ்சிகளில் குழந்தை பாலியல் கொடுமை குறித்து பேச தொடங்கினார். தான் அனுபவித்த இன்னல்களை மேற்குறியிட்டு சில தகவல்களை தான் நிகழ்சிகளில் வெளியிட்டு சட்டம் மாறுதல்களை கொண்டு வந்தார். பின் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் குறித்த சட்டத்திற்கு ‘ஒப்ரா சட்டம் என்று பெயர் வந்தது.
இவரது ‘ஓப்ராவின்ப்ரே ஷோ’ உரையாடல் நிகழ்ச்சி 132 நாடுகளில் ஒலிஒளி பரப்பப்பட்டது. இவரின் உச்சரிப்பு இவரை உச்சிக்கு கொண்டு சென்றது,
                      
“நான் ஒரு மாத சம்பளம் வாங்கும் பெண்ணாக இருக்க மாட்டேன் நானே ஒரு தயாரிப்பாளராக வளர்வேன்
என்ற ஒப்ராவின் வார்த்தை படி இன்று உலகின் தலைசிறந்த பணக்காரர்களில் ஒருவராக திகழ்கிறார். மேலும், கறுப்பின மக்களில் இன்று பெரும் புள்ளியாக இருக்கிறார். அன்று வறுமையில் வாடிய அதே ஒப்ரா ஒரு புகழ்பெற்ற நட்சத்திரம் என்பதை தாண்டி தர்ம தேவதையாக இன்று வரை பார்க்கப்பட்டு வருகிறார். தான் சேகரித்த சொத்துக்களை கறுப்பின குழந்தைகள் படிப்பிற்கும், எய்ட்ஸ் நோயாளி மருத்துவ செலவிற்கும், பேரிடர் காலங்களில் நிவாரணம் அளித்தும் பொது சேவை செய்து வருகிறார்.

சாதாரணமாக சாலை ஓரம் வறுமையில் வாடிய ஒப்ரா, இன்று சாலைகளில் பசிக்காக கையேந்து நிலையை எதிர்த்து சேவை செய்து வருகிறார். ஊடகத்தில் மட்டுமல்ல உலகத்திலும் மிகப்பெரிய ஆளுமையாக ஒப்ரா திகழ்கிறார்.
‘தான் ஒரு சப்பை மூக்கு, முட்டை கண்ணு கொண்ட கறுப்பின பெண், அதனால் என்ன?” என்று இன்று பெருமையாக சொல்லி கொள்கிறார். 
இந்த நேரத்தில் நாம் ஒப்ராவின்ப்ரே வை நினைவுகோருவோம்.







நன்றி !
விஜய் தேசிங்
9884112420
vijaydesing555@gmail.com


வரலாற்றில் ஒரு பக்கம் - இயக்குனர் மொசான் மேக்பல்பப்






- Mohsan Makhmalbaf



உலக சினிமாவில் தலை சிறந்த இயக்குனராக கொண்டாடப்பட வேண்டிய மற்றொரு இயக்குனர், மோசன் மக்மால்பஃப்.

ஆம், உலக சினிமா வரலாற்றை புரட்டி பார்த்தால் மொசான் மேக்பல்பப் பற்றி ஒரு பக்கமாவது கட்டுரை இருந்திருக்கும்.

ஈரான் நாட்டில் பிறந்த இவர் சிறு வயதிலே வறுமையின் பிடியில் சிக்கியவர். அதன் காரணமாக கல்வியை இழந்து கூலி வேலை செய்து வந்தார். ஐஸ் க்ரீம் விற்பது, சுமை தூக்குவது, மெக்கானிக் வேலை செய்வது என்று தன் இளமை காலமும் இப்படியே நகர்ந்தது.
தனது 17 வயதில் ஒரு சூழ்ச்சியில் சிக்கி ஈரான் அரசிற்கு எதிராக செயல்பட்டவர் என்று கைது செய்யப்பட்டார். சிறையில் காவலர்களால் சித்ரவதை அனுபவித்தார். அந்த இன்னல்களையும் தாண்டி தன் சிறைக் காலங்களை கவிதை, கதைகள் எழுதி கடந்து வந்தார். சிறையில் எழுதிய கவிதையும் கதையும் அவரை எழுத்தாளராக மாற்றியது.
குழந்தை பருவத்தில் வறுமை, இளமை பருவத்தில் சிறைச்சாலை சித்ரவதைகள் என்று இருந்த மொசான் மேக்பல்பப் தன் இருபத்தி நான்கு வயது வரை சினிமாவையே பார்த்தது இல்லை. சிறையில் இருந்து வந்த மொசான் மேக்பல்பப் ஒரு எழுத்தாளராக தன் வேலைகளை செய்து வறுமையில் இருந்து தப்பித்தார். பின் திரைப்படங்களின் மீது ஆர்வம் எழுந்து ஒரு திரைப்படம் விடாமல் பார்த்து சினிமாவையும் கற்று கொண்டார். பின் ஒரு எழுத்தாளராகவும் சினிமாவை பார்த்து கற்று ஒரு இயக்குனராகவும் வளர்ந்தார்.
அதன் பின் சில படங்கள் இயக்கினார். இவர் இயக்கிய moment of innocence’ , ‘kandahar’ . ‘the silence’  போன்ற திரைப்படங்கள் எடுத்து உலக திரைப்பட ரசிகர்களை தன் பால் இழுத்து விருதுகளை குவித்தார்.


தான் மட்டும் திரைப்படம் கற்று கொண்டால் போதாது என் வழி பிறரும் சினிமாவை கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன் மனைவி மகள்கள் உட்பட பிறருக்கும் சினிமா கற்று தர தன் வீட்டிலே ஒரு திரைப்பட பள்ளி துவங்கினார்.  அதில் படித்த தன் மகளான ‘ஹானா தன் எட்டு வயதிலே ஒரு திரைப்படம் இயக்கி ‘ உலகில் இளம் இயக்குனர் என்ற பெருமைக்குரியவர் ஆனார். இவரது இன்னொரு மகளான ‘சமீரா’ தலைசிறந்த பெண் இயக்குனராக பின் காலத்தில் வந்தார். சமீரா இயக்கிய ‘ஆப்பிள்’ திரைப்படம் தன் தந்தை மொசான் மேக்பல்பப் ஐ மிஞ்சிய ஒரு படைப்பாக வந்தது.


மொசான் மேக்பல்பப்:-
“ஆனா விதை நான் போட்டது”




மேக்பல்பப் இவரது பள்ளியில் திரைப்படம் மட்டும் அல்லாமல் மற்ற திறமைகளையும் ஊக்குவிக்கும் விதமாக சைக்கிள் ஓட்டுவது, கார் ஓட்டுவது,சமையல் நிபுணர் கலை, கம்யூட்டர் கலை, ஓவியம் வரைவது, கதை எழுதுவது போன்றவற்றையும் கற்று கொடுத்தது.

தான் கற்று கொண்டதை மற்றவருக்கும் சொல்லி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இவரை ஒரு இயக்குனரில் இருந்து ஒரு தலை சிறந்த ஆசிரியராக வரலாற்றில் நிறுத்தியது. ஈரான் நாட்டிற்கு எதிராக செயல்பட்டார் என்று இளம் வயதில் சிறைச்சாலை சென்ற இவர், தன் தாய் நாடான  ஈரானுக்கு 50 மேற்பட்ட சர்வதேச விருதுகளை கொடுத்தது. இன்று வரை பல திரைப்பட கல்லூரியில் ஈரானிய திரைப்படங்கள் பார்த்ததுண்டா என்று அந்த நாட்டை மேல் தூக்கி சொல்வதற்கு காரணம் இவரும், இவரது பள்ளியில் இருந்து வெளி வந்த இயக்குனர்களின் படைப்புகளும் தான்.
இந்த தருணத்தில் தலைசிறந்த ஆசிரியர் மொசான் மேக்பல்பப் ஐ நினைவு கோருவோம்.

நன்றி ,
விஜய் தேசிங்
9884112420
Vijaydesing555@gmail.com

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல.. - மருது சகோதரர்கள் வீழ்த்தப்பட்ட கதை

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல..  என்ற வரலாறு ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி துரோகத்தால் வீழ்த்தப்பட்ட ம...