freelancing writer

My photo
Am Freelance in any Area !

Tuesday, October 29, 2019

"அவனுக்கு ஒரு நாள் மாதவிடாய்" - சிறுகதை




அடையாறு ஐயப்பன் கோவில் பேருந்து நிலையத்தில் ஒருவன் பேருந்திற்காக நின்று கொண்டிருந்தான். அது ஒரு பூஜை வேளை போல, ஒரு விதமான கோவில் வாசனை, “கார்த்திகை தீபம் சுவாமிக்கு கற்பூரதீபம் சுவாமிக்கு” என பாடல் ஒருபுறம் ஒலித்து கொண்டிருந்தது. 
எதிரே ஒரு சாப்பாடு கடை, சுட சுட இட்லியை தட்டிலிருந்து உதிர்த்து ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டனர். பின்பு சாம்பார் சமையலில் இருக்கும் போது அதை கட்பனியன் போட்ட ஒரு தாத்தா கரண்டியில் எடுத்து நக்கி பார்த்து தன் நாக்கை தட்டி, சப்பு கொட்டினார். அது அவருக்கு பேரின்பம் புருவம் தூக்கி புன்முறுவலிட்டார்.  இரைச்சலான சாலை. திடீரென வயிற்று வலி 
காலையில் சாப்பிட்ட தோசை, தக்காளி சட்டினி தான் என நினைத்து லேசான பதட்டத்துடன் இருந்தான். குணிந்து பார்த்தான்.
வெள்ளை பேண்ட் ல் இடது கால் இடத்தில் படர்ந்தும் படராமல் சிவப்பு கரை. வேகமாக நடந்தான். ஒரு அரசு இலவச கழிப்பீடத்திற்கு சென்றான்.  அங்கு மேசையில் அமரந்திருந்த பெண் துப்புறவு பொறுப்பாளரை நிமிரந்து பார்க்காமல் மர மேசையில் சட்டென ஐந்து ரூபாய் வைத்து மடமடவென சிவப்பு நிற ஆண் குறியீடு உள்ள ஆண் வரிசைக்கு சென்றான்.
அங்கிருந்த ஆணுறை பெட்டியில் அவன் தோள் இடித்து சென்றான். 
கழிப்பறை அனைத்தும் தாழிட்டு இருந்தது. ஒரு கழிப்பறை வாசலில் ஒருவன் பீடி பிடித்தபடி நின்றிருந்தான். அவ்வப்போது அந்த பெண் துப்புறவாளி தண்ணீர் ஊற்றி கழிவிருப்பார் போல,அந்த இடம் ஈரமாக சதசதவென இருந்தது. 
சடனு ஒரு சப்தம் தகர கதவு திறந்தது. இவனை தள்ளி விட்டு பீடி பிடத்திருந்தவன் உள்ளே சென்று பெருமூச்சுடன் சிரித்து கொண்டே போனான். பேண்ட் வழியே தனது செருப்பை தொட்டது ஒரு துளி இரத்தம். 
கால்கள் நடுங்க, முகம் வேர்வை கொண்டு கதவை தட்டினான். "அடங்கோத்** எவன்டா அது" னு உள்ளே இருந்து குரல் வர..
பக்கத்து கழிப்பறையில் இருந்து ஒருவன் வெளிவந்தான். இவன்‌ நின்றிருந்த இடத்திலிருந்து அந்த கழிப்பறையினுள்‌ சென்றான். தகர கதைவை சட்டென சாத்தினான்.‌ கதவு தளதளவென ஆடியது. அவசரமாக உள்ளே செனசென்றான பெல்ட்டை கழட்டி, தனது பேண்ட் ஐ கழட்டினான். 
அவசரத்தில் கழட்டிய போது தனது முழுகால் சட்டையின் பட்டன் உருண்டு கழிப்பறை குழாயில் விழுந்தது. தனது உள்ளாடையை கழட்டி குணிந்து பார்த்தான். அவன் இனப்பெருக்க உறுப்பிலிருந்து இரத்தம் வழிந்தது. அவன் கையில் அது பட்டது. தன் கைக்குட்டையை தன் உள்ளாடையில் சுருட்டி, தன் முழுகால் சட்டையை சற்று தண்ணீரில் தேய்த்து அணிந்து கொண்டான்.அந்த இரத்த கரை வெளிர் சிவப்பில் லேசாக இருந்தது. 
முகத்தை கழுவி கொண்டு, கழிப்பறையிலிருந்து வெளியே வந்து நின்றான். சற்றும் ஓய்வில்லாமல் மக்கள் நடமாடியே இருந்தனர். என்றும் இல்லாமல் அன்று அனைவரும் இவனையே பார்ப்பது போல் தோன்றியது. வேகமாக அங்கிருந்து நடந்து ஒரு குறுக்கு சந்தின்‌ வழியே வந்து ஒரு நடைபாதையில் அமர்ந்தான். ஒரு புறம் வயிற்று வலி , எடை மிகுந்த கல்லை அவன் வயிற்றில் போட்டு எடுத்தது போல் தொடர்ந்து வலியில் அவதிப்பட்டான். தன் நண்பர்களுக்கு தெரிந்தால் அவனை கேலி செயவார்கள். தன் பெற்றோருக்கு தெரிந்தால் அவனை வீட்டின் மூலையில் அமரவைத்து விடுவார். அவனுக்கு பிடித்த பொருளை சாப்பிட முடியாது. அவனுக்கு பிடித்த ஆடையை போட முடியாது. அவன் நினைத்த இடங்களுக்கு எளிதில் செல்ல முடியாது. பெரிய டேங்க வெச்ச பல்சர் வண்டியை ஓட்ட முடியாது. தன் காதலி என்ன நினைப்பாள்.  அவனோட கனவு ஆட்டமான கபடி ய எப்படி விளையாடுவான். அம்மா அனுப்ப மாட்டாங்களேன். சரி தனிமைய போக்கிடுனு கடவுளிடம் கேக்கலாம்னு போன கோவில் உள்ளையும் விட மாட்டாங்க. சரி இந்த விசயம் நமக்குள்ள இருக்கட்டும்.இத யார்ட்டையும் சொல்லகூடாதுனு நினைச்சு, தானா ஒரு சானிட்டரி நாப்கின் வாங்கி அணியலாம் னு பாத்தா மெடிக்கல் சாப் காரன் ஒரு மாதிரியா பாக்க வாய்ப்பு இருக்கு. கருப்பு பாலிதீன் கூட அரசு தடை செய்து விட்டது அவன்‌ இனி எப்படி மறைத்து தருவான். நான் அந்த ஆரஞ்சு கலர் நாப்கீன் பேக் க எப்படி எடுத்துட்டு போவன். 
இப்படிதான் பாலையங்கோட்டை, சிறுமிக்கு நடந்துச்சு அவள கேலி செஞ்சு சின்ன வயசுல தற்கொலைக்கு தள்ளி விட்டுச்சு இந்த சமூகம். புயல் அப்போ வீட்டிலே இருக்க வெச்சு சுவர் சாய்ந்து பலியாக வைத்தது இந்த மாதவிடாய்.
எனக்கும் இதுல எதனா நடந்துடுமோ? னு பல கேள்வி ஓடிட்டு இருந்துச்சு. 
அந்த தெருமுனையில, யோசிச்ச படி உட்கார்ந்து இருக்கான் . 

இப்படி ஒரு நிமிடத்துல ஒரு ஆணுக்கு மாதவிடாய் வந்த பெண்ணோட வெள்ளை சுடிதார்ல ஒட்டி இருந்த குருதிய பாத்ததும், ஆயிரம் பயத்தையும் அவன் கண்ணுக்கு முன்ன கொண்டு வந்தது. 

ஏன் இந்த பயம்?‌‌‌‌ அவனுக்கு வந்தது.. அந்த பயத்த பாத்து ஏன் ஓடனும்? 


இவன்‌ பயந்தது , மாதவிடாய் க்காக இல்லை. இந்த சமூகம். இந்த சமூகத்தின் நிலைபாடு. மனித இயல்ப இப்படி மாற்றி அதற்கு தீட்டு னு பெயர் வெச்சு மனித உடல் அனிச்சையிலிருந்து தூரமா வெச்சது. காரணம் என்ன? 
ஆதி காலத்துல மனிதன் சிறு காயம் வந்தாலே இறந்து போகுற நிலையில இருந்தான். ஆனால் பெண்கள் அதுபோல இல்லாம ஆரோக்கியமா வாழ்ந்து வந்தாங்க. ஐந்து நாள் தொடர்ந்து இரத்தம் வழிந்தும் அந்த பெண் இறக்கவில்லை. இனப்பெருக்கத்தில் இணைந்து குழந்தையும் பெற்றெடுத்தாள். ஆண்களால் அது முடியவில்லை. இதை பார்த்து ஆண் வியந்தான். பெண்களை வழிபட ஆரம்பித்தான். சக்தி, பராசக்தி னு பேர் வைத்தான். சிலை செதுக்குனான். கடவுளாக்கி கோவில் உள்ள வைத்தான். பின் ஆணை விட பெண் உயர்வாக இருப்பாதல்‌. எங்கு ஆண்களின் நிலைபாடு இவ்வாறு இருந்துவிடும் என்ற நிலையில் இடைநிலை காலத்தில் தனக்கென சமூகத்தினை உருவாக்கி , அதில் தந்தை வழி மரபை கொண்டு வந்து. பெண்ணை இரண்டாம் பட்சமாக தள்ளினான். சாஸ்திரம், மனுதர்மம், பிராமணம் னு சொல்லி பெண்ணோட உடல் மாற்றமான மாதவிடாய் சுழற்சியை தீட்டு என பெயர் வைத்து பெண்களை கோவில் கருவறையிலிருந்தும், சமூகத்திலிருந்தும் தள்ளி வைத்தனர். ஏன் ஆணாதிக்க சமூகத்தில் பெண்களின் பெரும்பாலான இருப்பு வெளியான சமையலறையிலிருந்தும் அந்த மூன்று நாளில் தள்ளி வைத்தனர். ஐதிகம், பாரம்பரியம், கலாச்சாரம் பேசும் நாடு முன்னேற வாய்ப்பில்லை. இந்த முறைகளில் கொண்டு வரப்படுவது அனைத்தும் அடக்குமுறையில் வந்து சேர்கிறது. பெண் புடவை கட்டினால் நாகரீகம், பெண் தாளி கட்டினால் கலாச்சாரம், பெண்ணுக்கு சமையல் செய்வது பிடிக்கும், பெண் மெட்டியணிய வேண்டும் என பல அடக்குமுறை வாய் பேச்சாகவும், செயல்வடிவிலும் ‌சமூகத்தில் பிணைந்து கிடக்கிறது. மனித உடலில் நிகழும் மாற்றங்களை பள்ளி கல்வி பாடத்தில் அமைப்பது மாற்றத்திற்கு ஒரு அடிகல்லாக இருக்கும். அப்படி பாடத்திட்டத்தில் கொண்டு வரப்பட்டவை பேசப்படவேண்டும். வீட்டில் பெற்றோர்கள் ஆண், பெண் பிள்ளைகளுக்கு மனித உடலியல் மாற்றங்களை விளக்க வேண்டும்.

- விஜய்தேசிங்

No comments:

Post a Comment

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல.. - மருது சகோதரர்கள் வீழ்த்தப்பட்ட கதை

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல..  என்ற வரலாறு ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி துரோகத்தால் வீழ்த்தப்பட்ட ம...