காமம் உலகில் என்னவென்று தெரியாமல் பிறக்கும் குழந்தையில் இயற்கையுடன் காமமும் ஒரு சக்தியாக நிறைந்துள்ளது. உலகில் பிறக்கும் அனைத்து உயிரினங்களிலும், இது இணைந்துள்ளது என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.
அதனால்தான் கூறுவர், “சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை” என்றார்கள். காம சக்தியை எந்த ஓர் உயிராலும் கட்டுப்படுத்த இயலாது. எவ்வளவு பெரிய ஞானியாக இருந்தாலும் காமத்தைக் கடந்து செல்ல தான் வேண்டும்.
‘காமத்தை அடக்க வேண்டும். அப்போதுதான் இறைவனை அடைய முடியும்’ என்று பல்வேறு மதங்கள் போதனை செய்வதுதான், இன்றைய மத குலத்தில் வளம் வரும் சாத்திரங்கலாகும்.
அதாவது, இயற்கையாக எழும் காமத்தை ஒரு தவறான எண்ணமாகச் சித்தரித்து, அதை அடக்க வேண்டும் என்றும், காமம் ஒரு பாவம் என்பது போன்றும். சங்க காலம் தாண்டி வந்த மக்களிடம் வந்தது தான். சாதி, சமயம், பிரிவு, இதனுடன் வந்தது தான் காமம் ஒரு தீய பொருள் அது ஒரு பாவ செயல் என மூடி வைக்கப்பட்டது. ரவிக்கை அணியாத பெண் ஆடம்பரம் என தன்னை வளர்த்தி கொண்டால், பெண் குழந்தைகளை சிறு வயதில் இருந்து மூடி வைக்க பட்டனர். ஆண்களிடம் காமம் என்ற சொல் தீய பொருளாக கற்க வைத்தனர். காமத்தை ஒரு சந்தோஷ அனுபவமாகக் கருதும் மனோபாவம் மறைந்து, ஏதோ விஷமாகப் பயந்து பயந்து அனுபவிக்க ஆரம்பித்தனர் மக்கள்.
காலம் மாற தாசி குலத்தவர் பல மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்து செல்லப்பட்டனர். சிலர் தடை விதிக்கவும் பட்டனர். காமம் கல்வியில் ஒரு அங்கமாகவும் இருந்தது. 64 கலைகளில் மறைக்கப்பட்ட கலையாக காம் மாறியது. காமம் ஒரு இயற்கை உணர்வு அதை அனுபவிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்பதை வரும் காலத்திற்கு கூற கோயில் சிலைகளிலும், சாஸ்திர நூல்களிலும் காமசாஸ்திரத்தை நம் முன்னோர்கள் வடித்துவைத்திருக்கிறார்கள்.
ஆனால், இடைக்காலத்தில் சில போலி மதவாதிகள், காமத்தை அடக்கினால்தான் இறைவனை அடையமுடியும் என்று சொல்லி மக்களும் நம்பத் தொடங்கிய காலத்தில்தான் இல்வாழ்க்கை சிக்கலாகத் தொடங்கியது.
போலி மதவாதிகளுக்குப் பயந்து காமம் என்பதை தன் சந்ததி உருவாக்க மட்டுமே பயன்படுத்தத் தொடங்கினார்கள்.
20-ம் நூற்றாண்டில் காமத்தைப் பெரும் பாவம் என்று ஒரு கும்பல் உரக்கச் சொன்னாலும். காமம், மனிதர்களின் பிறப்புரிமை என்று பெண்கள் கிளர்ந்தெழத் தொடங்கினார்கள். காமம் பற்றி அறிந்துகொள்ள இணையத்தை தேடி மக்கள் வரத் தொடங்கி இருக்கிறார்கள். நீலப்படங்கள், குருந்தகடுகள், வலைபூக்கள் என பெருகி அதில் மக்கள் நாட்டம் கொண்டனர்.
சங்க காலத்தில் காமம் கலாசாரமாய் இருந்தது, தற்போது தனக்கென கலாச்சாரத்தை உருவாக்கி ஒரு கட்டத்தில் கலாச்சார சீர்கேடு என்று மாறி விட்டது.
மூடி வைக்க பட்ட ஒன்று காலம் ஆக ஆக வெடித்து சிதறி ஆங்கங்கே கற்பழிப்பு என சில வன்முறைகளை தூண்டுகிறது. மேலை நாடுகளில் ஆண்கள் பெண்கள் என அவர்களின் அந்தரங்களை நாடு ரோட்டில் விளம்பர பலகையில் காண முடியும், அதனால் அங்கும் காமம், காதல், அந்தரங்கள் அனைத்தும் பழகி விட்டன , அதனால் அங்கு குற்ற செயல்களும் குறைந்தன. ஆனால் இங்கு ஒரு பெண் இப்படி தன ஆடை அணிய வேண்டும் என்று பிறக்கும் முன்பே முடிவு செய்து விடுகின்றனர். கற்பழிப்பு போன்றவை நிகழ்கிறது.
சங்க காலத்தில் கற்பழிப்பு என்பவை காண அறியதவையாகும். அங்கு ஆண்கள் தங்களின் விருபத்திற்கு தாசியிடம் சென்றனர். இங்கு அந்த தொழில் செய்யும் எங்களையும் அருவருப்பாக பார்த்து ஒதுக்கி தள்ளினர். மும்பை போன்ற இடங்களில் வெளிப்படையாக நடத்தப்படும் தொழில் ஏன் தமிழகத்தில் மறைமுகமாக நடத்த படுகிறது. கேட்டால் கலாச்சாரம் சீர் கேடாம்.
அறிவியல் ஆய்வில் ஆண்களை விட பெண்களுக்கு தான் காமம் என்ற சொல்லில் முழு அளவு ஆர்வம் கொண்டவர்கள். இது நவீன காலம் மட்டுமல்லாமல் சங்க காலத்திலும் வந்துள்ளது.
‘என் காதல் நோயின் கொடுமை அறியாமல் தென்றல் காற்று அலைக்கழிக்கிறது; அதை அறியாமல் இந்த ஊரும் உறங்குகிறது. என் நிலையை எப்படிக் கூறுவேன்? முட்டுவேனோ? தாக்குவேனோ? கூவுவேனோ?’
என்ற அகநாநூறு பாடல் வரிகள் பெண்ணின் காமம்மிக்க மனத்தைத் துல்லியமாகச் சித்தரிக்கிறது.
சங்க காலத்தில் ஆண்கள் மட்டுமே, பெண் மீதான விருப்பத்தை வெளிக்காட்டுகிறான் என்றில்லை; பெண்ணும் தன்னுடைய பாலியல் விருப்பத்தைத் தயங்காமல் வெளியிடுகிறாள்.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள், பாலியலை மிகவும் இயற்கையானதாகக் கருதினர். அதனால்தான் பாலுறவை காமக்கலையாக அதாவது காமம் + கலை என பார்த்து, ரசித்து வாழ்ந்தார்கள்
பெண்கள் காமவயப்பட்டு, காம உணர்வுகளை வெளிப்படுத்தும் அருமையான பாடல்கள் பல சங்க இலக்கியத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
எடுத்துகாட்டாக (பெண் லிங்கம், காமன் கவிகை, சந்திர நாடி, நகக்குறி, பற்குறி, நாபிக்குறி ,சுகக்குரல் , சம்போக சுகம் எழத் தட்டுதல் )
சங்க காலத்தில் காமம்
சங்க கால இலக்கிய நூலில் பல இடங்களில் சிற்றின்ப அடிப்படையில் பல நடைகள், பாடல்கள் இருந்தாலும் அதில் விறலி என்பது சிறப்பு முக்கது.
விறலி என்பவது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த பெண் , நாட்டிய கலைகளில் சிறந்த பெண், அவளை தலைவியிடம் தூது அனுப்புவது தான் இவற்றின் சாரம்.
விறலி விடு தூதுகள் யாவும் சிற்றின்பம் பேசி, நல்லின்பம் பேண அறிவுறுத்துவது.
விறலிவிடு தூதில் பொதுவாகக் காணப்படும் கதை இதுதான்: உயர்குடிப் பிறந்தஆண் தன் காமத்திற்கு தாசியை நாடுவதும், இதன் மூலம் பொருள் இழத்தலும், நாளடைவில் தாசியால் அவமதிக்கப்பட்டு அவளை விட்டு வெளியேறுதலும், இறுதியில் விறலியைத் தூதுவிட்டு, குடும்பத்துடன் இணைந்து மனைவி மக்களுடன் இன்பமாக வாழ்தலும் ஆகும்.
ஆகையால் இலக்கண நூல்களில் விறலி விடு தூது இலக்கியங்கள் எல்லாம் சிற்றின்ப வருணனை கொண்ட பாடல்களும் கதையும் தான் சொல்லப்படுகிறது. இறுதியில் கண்துடைப்பிற்காக ஆணுக்கு அறிவுறுத்துவது.
ஆனால் புலவரின் நோக்கம் சிற்றின்பம் பற்றி ஆதி முதல் அந்தம் வரை விவரிபதற்காகமட்டும் தான்.
எ.கா ரவிக்கை, பொற்சரிகை, கிண்ண முலைக் கச்சு, சந்திர காந்தக் கச்சு என்பது பற்றி விலாவாரியாக உள்ளது.
சிற்றரசர்கள் ஒன்றாகக் கூடி சிற்றின்ப கதையை கேட்டுச் சுவைப்பார்களாம்.
மற்றும் அடுத்தகட்ட கால நிலையில் சிற்றின்ப கதை நூல்களுக்கு பெரிய வாசகர் வட்டம் இருந்திருக்கிறது..
நோக்கம் சிற்றின்பம்தான் என்பது தெளிவு. நீலப்படங்கள், குறுந்தகடுகள் வரும் என எண்ணிக்கூட பார்த்திராத காலத்து காமச் சித்திரங்கள்.
தமிழ் கலாசார சீர்கேடு என்று கூறுபவர்கள் தமிழரால் கட்டப்பட்ட அல்லது செதுக்கப்பட்ட சிலைகள், கோவில்கள், தேர்கள் போன்றவற்றை அசிங்கம் என்று நினைபவர்கள் தான். காமம் இயற்கையில் ஒன்று. மனிதர்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டிய ஒரு உணர்வு கர்த்தா , ஆண் பெண் என பாகுபாடு பார்க்காமல் வழங்கபடவேண்டியவை , தெரிந்து கொள்ள வேண்டியவை.
- விஜய் தேசிங்
இலக்கண குறிப்புகள்- ஆசிரியர். சுந்தர் ராஜு
