தனுஷ்...!
தந்தையோட உதவியோட திரையில வந்தவரு! அண்ணனோட உதவில மக்களுக்கு தெரிஞ்சவரு !
அவ்ளோதான் இவருடைய அறிமுகம்!
ஹீரோ னாலே கட்டுமஸ்தான உடல் இருக்கனும், அழகா பேசனும்! பத்து பேர பறக்க விடனும்! அப்படி இருந்த காலகட்டத்துல "யார்ரா இவன் தீக்குச்சிக்கு சர்ட் பேண்ட் போட்டா மாதிரி இருக்கான்" னு சொல்லி சிரிச்சாச்சு!
சரி அதையும் தாண்டி யார் இந்த மனுஷன்! திரையில பாத்து ரசித்த சில காட்சிகள் பற்றி விமர்சனம் இதோ!
1 காதல் கொண்டேன் ல, காட்டு வீட்ல திவ்யா கிட்ட "திவ்யா ஒரு ஓரத்துல நாய்க்குட்டி மாதிரி இருந்துக்கறனே" னு சொல்லும் போது, பல இளைஞர்களின் ஒருதலை காதலோட உச்சத்தை தன் நடிப்பின் மூலம் வெளி கொண்டு வந்தாரு!
2 . புதுபேட்டை ல, அப்படியே புது அவதாரம் எடுத்தாரு, ஒரு வடசென்னை ரவுடி னா இதுவரை சினிமாவுல குண்டா கருப்பா இருக்கனும் இல்லனா பலசாலி யா இருக்கனும் ற ஒரு கோட்பாடு இருந்தது, தன்னுடைய அம்மா வ வெட்டி முடிச்ச அப்பா தன்னையும் கொன்னுடுவாரு னு ஒரு பயத்தையும்!
தன் அம்மா வ பத்தி சக ரவுடிகளோட பேசுறதும்! தன் பிள்ளைகிட்ட அப்பா கையாளதவனு வெளிகாட்டும் முகபாவனைகளும், இறுதியில் திரையரங்கை அரங்க வைத்து "தலைவா ... இமயம் சரிந்ததே!" னு சொல்ற விதமும் இன்று வரை கொக்கி குமாரின் கதாபாத்திரம் மனசுல நிக்க வைக்கும்!
3. யாரடி நீ மோகினி , " பசிக்குது" னு கேட்கும் போதும் "எனக்கு யாரும் இல்ல மா " னு சொல்லும் போது!
4. பொல்லாதவன் ல, "தொட்ரா பாப்போம், தொட்ரா" னு வில்லன ஒரு சாதாரண இளைஞன் மொறைக்கும் போது!
5. மூன்று படத்துல இறுதி கட்டத்துல தற்கொலைய சினிமாத்தனமாக காட்டிட்டு இருக்கும் தமிழ் சினிமாவுல , உண்மையில் ஒரு தற்கொலை பண்றவனோட மனநிலைய காட்டிய போது!
6.மயக்கம் என்ன , ல "எனக்கு வேற எதும் தெர்யாது யாமினி இது மட்டும்" தானு தன்னுடைய கனவுக்காக கண் கலங்குன காட்சிகள்!
7. ரஞ்சனா ல, இறுதிகட்டத்துல சாகும் போது பேசிய வசனங்கள், அதனோட தோரணைகள்! நடிக்கமலே ஒரு பேச்சால கண்ணு கலங்க வைக்கும்!
8. விஜபி மொட்ட மாடில அம்மாகிட்ட பேசற காட்சி, தனக்கு வேலை கெடச்சதும் மொட்டை மாடில அழுவுறதும், இண்டர்வியூ முடிச்சுட்டு பைல் தூக்கி போட்டுட்டு அதை மறுபடியும் எடுத்து வைச்சி உக்காரதும்! தன் அம்மா இறந்ததுக்கு அப்பறம் முதலாளி பொண்ணு ட்ட "சிகரெட் பிடிச்சா எங்க அம்மாக்கு பிடிக்காது" னு சொல்ற காட்சி!
9. மரியான் ல , பார்வதி கிட்ட போன் பேசற காட்சி, கடல் ல பாத்ததும் "ஆத்தா" சொல்ற காட்சி!
10. ஷமிதாப் - படத்துல வாய்ப்புக்காக அக்ஷரா ட அழுவுற காட்சி!
இப்படி தன்னோட நடிப்புல மக்களோட உணர்வுகளையும் சேர்த்து நடிச்சுருக்காரு, அவர் அழுகுற காட்சில மக்களும் அழுகறது போல!
நடிப்புல மட்டுமல்லாம, பாடலாசிரியராக பல பாடல் இன்று வரை முனுமுனுக்கும் ,
"இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா"
"அம்மா அம்மா நீ எங்க அம்மா"
"குனியும் போது குத்தும் ஊருக்குள்ள துணை தேடி விணை தேட தேவ இல்ல"
"நிழல் தரும் இவள் பார்வை
வழி எங்கும் இனி தேவை"
"என் காதல் பாடலெல்லாம் நீதானே பெண்ணே ஓ! ஓ!"
"போ இன்று நீயாக வா நாளை நாமாக"
"தேடிய தருணங்கள் எல்லாம்
தேடியே வருகிறதே
தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம் சிரிக்கின்றதே "
"பாத்தன் களவு போன நிலவனா பாத்தன்"
மற்றும் தயாரிப்பாளராக,
பல கமர்ஷியல் படம் கொடுத்தாலும் (மூன்று, மாரி, தங்கமகன், விஜபி, நானும் ரௌடி தான், எதிர் நீச்சல், காக்கி சட்டை, காலா...)
விருதுகள் வாங்கும் அளவு பல தரமான படங்களும் தயாரித்து உள்ளார் .
(காக்கா முட்டை, விசாரணை...)
இயக்குனராக,
ஒரு படம்தான் எடுத்தாலும் பல நல்ல நல்ல காட்சிகள்!
குறிப்பாக,
இறுதி கட்டத்தில் , வசனமில்லாம் வரும் காட்சி!
அதுமட்டுமல்லாமல்,
சிவகார்த்திகேயன், அனிரூத், விஜய் சேதுபதி, சியான் ரோல்டன், நயன்தாரா, விக்னேஷ் சிவன், வேல்ராஜ், தீனா(விஜய் டீவி) போன்றவருக்கு அறிமுகமாகவும், மீண்டும் வரவும் தனுஷ் முக்கிய காரணமானவர்.
திரையில் நம்மள மாதிரி ஒரு சாதாரண ஆளு, பக்கத்து வீட்டு பையன் திரையில் வரதுனா அது நம்ம தனுஷ் தான்!
என்னத்தான் அப்பா, அண்ணன் உதவியோட வந்தாலும் இன்னிக்கு வரை அவர் துறையில ஜொலிக்குறாருனா அதுக்கு அவரோட திறமை தான் காரணம்!
வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனுஷ்!
#தனுஷ்35
-விஜய் தேசிங்

No comments:
Post a Comment