freelancing writer

My photo
Am Freelance in any Area !

Friday, October 24, 2025

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல.. - மருது சகோதரர்கள் வீழ்த்தப்பட்ட கதை

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல.. 

என்ற வரலாறு ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி துரோகத்தால் வீழ்த்தப்பட்ட மாவீரர்களின் கதைதான் இது. 

ஆங்கிலேயர்களை திக்குமுக்காட வைத்த மருது சகோதரர்களை காட்டி கொடுத்தால் அதிக வரிவிதிப்பு இல்லாமல் குத்தகை நிலங்களை பரிசா கிடைக்கும். அதனால் நாட்டாமைகள் மருது சகோதரர்களை காட்டி கொடுக்கின்றனர். 

இரவோடு இரவாக மருது சகோதரர் இளைப்பாறி கொண்டிருந்த கோட்டை திடீரென தாக்கப்படுகின்றது. அந்த தாக்குதலில் தனித்தனியாக பிரிந்து செல்கின்றனர் மருது சகோதரர்கள். 

மருதிருவர் தனித்தனியாக பிரிந்த நிலையில், சின்னமருதுவுடன் கறுத்தான் என்பவனும், ஒரு சிறுவனும் தங்கியிருக்கிறார்கள்.கறுத்தான், இளைய மருதுவைப் பிடித்துக் கொடுக்க, ஆங்கிலேயத் தளபதி அக்கினியூவை ரகசியமாகத் தொடர்பு கொள்கிறான். 

அதன்படி, தூங்கிக் கொண்டிருந்த இளையமருதுவை கறுத்தான் துப்பாக்கியால் சுட்டுவிட்டு வேட்டையாட வந்த யாரோ சுட்ட தோட்டா, மருது மீது பாய்ந்துவிட்டதாக நாடகமாடினான். 

காயமடைந்த சின்ன மருதுவை, கூலிப்படையினர் பிடித்து ஆங்கிலேயரிடம் ஒப்படைகின்றனர். அதன் பின் சின்ன மருது சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே பெரிய மருது திருப்புவனம் அருகே உணவும், உறக்கமும் ஓய்வும் இன்றி சுற்றித்திரிகிறார்.

பெரியமருது இருக்கும் இடத்தையும் கருத்தான் காட்டி கொடுக்க ,பெரிய மருதுவையும் சுற்றிவளைத்துப் பிடிக்கின்றனர். 

அதன்பின் மருதுபாண்டியர்கள் இருவரும் திருப்பத்தூர் கோட்டையில் துரோகக் கும்பலால் தூக்கிலிடப்படுகிறார்கள். 

அவர்களுடன் ஏறத்தாழ 500 போராளிகள் தூக்கிலிடப்பட்டு, அவர்களது தலைகள் கொய்யப்பட்டு அந்த தலைகள் கம்பங்களில் காட்சிப் பொருட்களாக சொருகி வைக்கப்பட்டன

எத்தனை வீரம் இருந்தால் என்ன? துரோகங்களை தமிழர்களுக்கு எதிர் கொள்ள தெரியவில்லை என்பதே உண்மை!  

தேசத்தின் மானம் காத்த மருதிருவர் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று

அக்டோபர் - 24


Monday, June 5, 2023

புராண திரைப்படங்களை புரட்டி போட்ட கலைஞர் கருணாநிதி.. காலம் கடந்தும் கர்ஜிக்கும் திரைப்பயணம் குறித்த ஒரு பார்வை இதோ..


திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்களின் 100 வது பிறந்தநாள் இந்தாண்டு தமிழகம் எங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராக திகழும் மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் இன்று அவரை நினைவு கூறுகிறது இந்த சிறப்புகட்டுரை. 


தமிழின தலைவர், தன்னிங்கரற்ற கலைஞர்,  அரசியல் ஆளுமை என்று வரலாறு ஒருபுறம் இவரை பற்றி பல சாதனைகளை எடுத்துரைக்கும் அதே நேரத்தில் இன்று வெகுஜன ஊடகங்களில் மிக சக்தி வாய்ந்த ஊடகமாக உலக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சினிமாவில் கலைஞர் கருணாநிதி அவர்களின் பங்கு அளப்பரியது.

தமிழ் ரசிகர்களை பொறுத்தவரை சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு ஊடகாமாகவும் கலை சார்ந்த விஷயமாக மட்டுமின்றி அது ஒரு உணர்வாக பார்க்கப் பட்டு வருகிறது. அதில் இடம் பெரும் காட்சிகள் வாழ்வியலாகவும் ஹீரோ தலைவராகவும் பார்க்கப் படுகிறது. அந்த சினிமாவினை இன்று வியாபார நோக்கில் பலர் அணுகி வருகின்றனர். ஆனால் சரியான வழியில் சரியான நோக்கத்தில் சினிமாவின் உண்மையான சக்தியை அறிந்து அதனை சரியாக முறையாக பயன்படுத்திய பெருமை கலைஞர் கருணாநிதிக்கே சேரும். தன் சிறு வயதிலிருந்தே தமிழ் மீது இருந்த அதிக ஆர்வத்தினால் தன் வாழ்நாளின் ஆரம்ப காலத்திலிருந்து ஏராளமான கவிதைகள், கட்டுரைகள் எழுதி தன் எழுத்து திறமையினை வளர்த்து பின் நாடங்களிலும் திரைப்படங்களிலும் திரைக்கதை எழுத வந்தார் கருணாநிதி.. 


எழுதுவது என்றால் இயற்கை, கற்பனை கதை, கட்டுக் கதை என்று இல்லாமல் சமூக பிரச்சனைகளை மக்கள் வாழ்வியலுடன் இணைத்து மிக அழுத்தமான வார்த்தைகளுடன் எழுதி வந்தவர். அவர் எழுத்தில் உருவான திரைப்படங்களின் மூலம் இன்றும் தமிழ் நாட்டில் திராவிட சிந்தனைகள் வேரூன்றி இருக்க செய்துள்ளார். களப்பணி ஒருபுறம் இருந்தாலும் காலத்திற்கே செல்லாமல் வெகுஜன ஊடங்கங்களில் தன் எழுத்தை முழுமையாக பயன்படுத்தி ஒரு புரட்சியை செய்துள்ளார்.

கடந்த 1947 ல் எம்.ஜி.இராமசந்திரன் நடிப்பில் உருவான ராஜகுமாரி திரைப்படத்தில் திரைக்கதையாசிரியராக முதல் முறையாக திரைத்துறையில் அறிமுகமானார் கலைஞர் கருணாநிதி. இந்த திரைப்படமே கருணாநிதி எம்.ஜி.ஆர் இருவருக்குமே திருப்புமுனையாக அமைந்த திரைப்படம். இப்படத்தின் மூலமே இருவருக்குமான நட்புறவு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.


அதை தொடர்ந்து பல படங்களை எழுதி வந்த கலைஞர்
1952 ல் சமூதாய பிரச்சனையை பேசி மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பேசி மிக அழுத்தமான திரைப்படமான 'பராசக்தி' திரைப்படத்தை எழுதினார். முந்தைய தமிழ் திரைப்படங்கள் இதிகாச கதைகளையும் மூட நம்பிக்கையை பரப்பும் மாயஜால திரைப்படங்களை இயக்கி அதில் 20 பாடல்களை வைத்து 4 மணி நேரத்தை ஒட்டி விடும் . அந்த நிலையில் பராசக்தி திரைப்படத்தையடுத்து அந்த வரையறையை மாற்றி கொடுத்தவர். 

காலம் கடந்தாலும் இன்றும் கலைஞரின் பராசக்தி திரைப்படம் அனைத்து சூழ்நிலைக்கும் பொருந்து போகும் அதனாலே இன்றும் ரசிகர்கள் அப்படத்தினை கொண்டாடி வருகின்றனர். அதன்படி அவரது எழுத்தில் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள், குறவஞ்சி, மாடி வீட்டு ஏழை, மணி மகுடம், மலை கள்ளன், மனோகரா, பணம், பூம்புகார் போன்ற பல முக்கிய திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர்.

தீண்டாமை, விதவைகள, மூட நம்பிக்கை கொடுமைகள், சுயமரியாதை திருமணம் என்று பல விஷயங்களை தன் எழுத்தில் வைத்து அதனை திரைக்காவியமாக மாற்றி மக்களிடையே அழுத்தமான சிந்தனைகளை பதிய செய்தார். அதை தொடர்ந்து இதிகாசங்கள், கற்பனை கதைகள், கடவுள் அடிப்படை கதைகள் என்று தமிழ் சினிமா இருந்த காலத்தில் மக்கள் பிரச்சனை, வாழ்வியல் சிக்கல்கள், உறவு, சமூக கடமைகள் என்று தமிழ் சினிமாவின் போக்கை மாற்றி புரட்சி செய்தவர்களில் முக்கியமானவராக திகழ்கிறார் கலைஞர். மேலும் திரைப்படங்களில் பேச்சு வழக்கு தமிழ் மொழியை சினிமாவில் அறிமுகப்படுத்தி பெரும் மாற்றத்தை உருவாக்கினார்.


திரைப்படங்களுக்கு தடைக்கோரி பல சர்ச்சைகள் இன்று நிகழ்கிறது. ஆனால் கலைஞர் கருணாநிதி திரைப்படங்களுக்கு அன்றே பல பிரச்சனைகள் தணிக்கைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. இதில் அதிக சர்ச்சைக்குள்ளான திரைப்படம் பாராசக்தி. தடைகளை தாண்டி பராசக்தி வரலாறாக மாறியது. திரைத்துறையில் கதையாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும், பாடலாசிரியராகவும் தன் எழுத்தை ஒவ்வொரு துறையிலும் பரிணமித்து காலத்தை அழிக்க முடியாத காவியங்களை கொடுத்தவர் கலைஞர். தணிக்கை மட்டும் இல்லையென்றால் திரைப்படங்கள் மூலம் திராவிட நாட்டை எளிதாக பெற்று கொடுத்து விடுவேன் என்று அறிஞர் அண்ணா சொல்லியதை செய்ய துவங்கியதை கலைஞர் கருணாநிதி செய்து அதற்கான பாதையை வகுத்து சென்றுள்ளார். மாபெரும் திரைக்கலைஞர் கருணாநிதி அவர்களின் இருப்பு பல நூறு ஆண்டு கடந்தும் அவரது தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் திரைப்படங்கள் மூலம் நீடித்து நிற்கும் என்று சொன்னால் மிகையாகாது.


- விஜய் தேசிங்

Friday, September 30, 2022

மாபெரும் கனவை மெய்பட செய்த மணிரத்னம் : பொன்னியின் செல்வன்: பாகம் 1

சோழ சாம்ராஜ்யத்தின் அரசர், இளவரசர்களை சூழும் வஞ்சகம்.. அதன் பிண்ணனி என்ன? வஞ்சத்தால் என்ன ஆனது சோழ ராஜ்யம் என்பதே பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் மீதிக்கதை. 

கோடிக்கனக்கான பிரதிகளை விற்று வெற்றி பெற்ற நாவலை படித்த வாசகர்கள் அனைவரும் எதோ ஒரு வகையில் ஒரு இயக்குனர்களாகின்றனர்.

அவ்வழியே இந்த படத்தை புத்தகத்துடன் ஒப்பிட்டு பார்த்து விமர்சிப்பது அபத்தம். 

முடிந்தவரை நீண்ட நாவலை சுருக்கி திரைக்கதை அமைப்பது கடினம். அப்படி சுருக்கியதை காட்சியமைப்பதும் கடினம்.  
பிரம்மாண்ட நாவலை சீரழிக்காமல் அழகாக திரைக்கதை அமைத்திருக்கின்றனர் #Manirathnam , #IlangoKumaravel ,  #Jayamohan .

தயாரிப்பாளர் மணிரத்தினம் மீது வைத்திருந்த அதீத நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். 

வாசகர்களின் கற்பனை ஓட்டத்தை முயன்றளவு எட்ட முயற்சித்திருக்கும் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்.

படத்தின் மிக முக்கியமான பலம். கதாபாத்திரத்தை கச்சிதமாக அரங்கேற்றிய அனைத்து நடிகர்கள்.

ஆதித்த கரிகாலனாக  #ChiyanVikram - ன் ஆவேசமும், தன் காதலியை நினைத்து உருகும் காட்சிகளும் மெய்சிலிர்க்க வைக்கிறார். 

வாளிலும் வார்த்தையிலும் மிடுக்கிடும் வந்தியதேவனை கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார் #Karthi . கிட்டத்தட்ட பெண்களிடம் உருகும் போது #AayirathilOruvan (முத்து) நினைவில் வருகிறார். 

பொன்னியின் செல்வனாக ஜெயம்ரவி? என்று விமர்சித்தவர்களை ஆச்சரியமூட்டுகிறார் #Jayamravi . அவ்வளவு நேர்த்தியான பொருத்தம். 

#Aishwaryarai  frame ல் வரும்போதெல்லாம் அவ்வளவு அழகு திரைக்கு அப்பால் இருப்பவரை நடிப்பினாலும் அழகினால் மயக்குகிறார். 

#Thrisha அழகும் ஐஷ்யவர்யா ராயின் அழகும் #Kalki  - ன் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கிறது. குறிப்பாக இருவரும் எதிரெதிரே சந்திக்கும் காட்சி Goosebumps. பூங்குழலியாக வரும் #Aishwaryalakshmi கடலுடன் கவர்கிறார். பத்து பொருத்தமும் பக்காவாக பொருந்தும் ஆழ்வார்க்கடியான் நம்பி கதாபாத்திரம். அப்படியொரு உயிரோட்டத்தை கொடுத்துள்ளார் ஜெயராம். இவர்களுடன் #PrakashRaj #parthiban #Rahmam #Kishore நடிப்பினால் கவனம் ஈர்க்கின்றனர். 


வசனங்களில் ஈர்க்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். காதல் வலியும் வெற்றியின் களிப்பும் தலைக்கேறிய இளவரசனின் ஆட்டம் அதுனூடே குட்டி பிளாஷ்பேக்  காட்சியமைத்தது அருமை.

தோட்டாதரணியின் கற்பனை வளம் படத்தை மேலும் மெருகூட்டி தரப்படுத்துகிறது.  இதனுடன் 
கண் இமைகளை மூட விடாமல் ரசனைக்கு உட்படுத்தும் காட்சிகளை கொடுத்ததில் ரவிவர்மனின் வேலைபாடு அளப்பரியது. குறிப்பாக க்ளைமேக்ஸ் கப்பல் காட்சி, விக்ரமின் பால்ய வயது காதல் கதை காட்சியமைப்பு.  

எந்தளவு மணிரத்னம் குழுவினர் களத்தில் வேலை பார்த்துள்ளாரோ அதற்கு நிகராக #ArRahman அந்த வேலையை அழகுப்படுத்தி அந்த கதையை உணர வைக்கிறார். காட்சிக்கு காட்சி வியக்க வைக்கும் பிண்ணனி இசை. 

ஹாலிவுட் படங்களை வியந்து பார்க்க முக்கிய காரணம் அதன் பிண்ணனி இசை.  அந்த இசையே காட்சியின் 
குணாதிசயத்தை கொடுத்து செல்லும் 
ஆனால் அதை பெரும்பாலும் கவனிப்பதில்லை. அது போலவே இந்த படத்தில் பல நுனுக்கமான வேலைகளை செய்துள்ளார் #Arrahman

கதை வாசிக்காதவர்களின் அடிப்படையில் 5 பகுதி நாவலை 2 பகுதியாக சுருக்க நிறைய காட்சிகளை முழுமையாக்காமல் கத்தரித்துள்ளனர்.
(வேறுவழியில்லை..) சில இடங்களில் CG ஒட்டாமல் இருக்கின்றது. ட்ரைலரை காட்டிலும் பரவால்ல..

மொத்தத்தில் படம் அனைத்து விதமான ரசிகர்களையும் கவரும்.. வாசகர்கள் தங்கள் கற்பனை எதிர்பார்ப்பை கொஞ்சம் தாழிட்டு வந்து படம் பார்த்தால் நல்லது. 
கல்கி எனும் மாமனிதரை 20K பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தி தேடி பார்க்க வைத்துள்ளார் மணிரத்தினம். 

மாபெரும் கனவை மெய்பட செய்ய தமிழ்சினிமாவே முயன்றது. இன்று அந்த பெருங்கனவை நிறைவேற்றிய மணிரத்னம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்...

- விஜய் தேசிங் 

Friday, August 12, 2022

தாலி அறுத்து ஒப்பாரி வைத்த திருநங்கைகள் – கூவாகம் மூலக்கதை







கூவாக திருவிழாவில் தாலி கட்டி மகிழ்ந்த திருநங்கைகள், இறுதி நாளில் தாலி அறுத்து ஒப்பாரி வைத்து அழுதபடி சென்றனர். சடங்குகளுடன் தங்களை உணர்வை இணைத்து கொண்டாடி முடிந்த கூவாக திருவிழா.

விழுப்புரம் மாவட்டம், உலுந்தூர்பெட்டை தாலுக்கா, சேர்ந்த பகுதியாக கூவாகம் உள்ளது, வருடாந்திரம் 14 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது கூத்தாண்டவர் கோயில் திருவிழாவாகும், இந்த திருவிழா முழுக்க முழுக்க திருநங்கைகளை முன்னிறுத்தி நடைபெறுகிறது, பொது மக்களை விட லட்சகணக்கான திருநங்கைகள் இங்கு வருகின்றனர். சாதாரண நாளில் எவராலும் கண்டுக்கபடாமல் இருக்கும் கூத்தாண்டவர் கோயில்.  சித்திரை மாதங்களில் களைகட்டும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும், தமிழகத்தில் மட்டுமல்லாமல் மும்பை, டெல்லி, மத்தியபிரதேஷ், ஆந்திரா,  கல்கத்தா    போன்ற மாநிலங்களிலும் திருநங்கைகள் வருகின்றனர். அதுமட்டுமல்லாமல்  ஜெர்மனி , அமெரிக்க, பிரான்ஸ் போன்ற இதர நாடுகளில் வாழும் இந்திய திருநங்கைகள் இங்கு வந்து திருவிழாவில் தங்களை ஈடுபடுத்தி கொள்கின்றனர். நடுத்தரமுதல், உயர் குடி, ஏழை என்ற வர்க்க ரீதியாக பல படி நிலை திருநங்கைகள் வருகின்றனர். பதினான்கு நாள் வரை நடக்கும் திருவிழாவிற்கு ஆறு மாதம் முன்பே அதற்கான பணங்களை சேர்க்க ஆரம்பித்து விடுகின்றனர். சில இடங்களில் லோக்கல் ரயிலில் செல்லும்போது  திருநங்கைகள் “கூத்தாண்டவர் கோயில் போகணும் காசு கொடுங்க” னு கேட்பார்கள்.  அப்படி ஆறுமாதம் முன்பே பல ஆர்வங்களை வளர்த்து ஒவ்வொரு திருநங்கைகளும் இருகின்றனர். இங்கு வந்தவர்களில்  பலரின் உச்சபட்ச கனவாக கூவாக கோவில் திருவிழா உள்ளது.

கூவாக திருவிழாவின் மூலக்கதை –

பெரும் இதிகாசமாக நம்பப்படுகின்ற மகாபாரதம் போரில் பாண்டவர் தரப்பு வெற்றி பெறுவதற்காக ஒரு மனித பலியை முன்னிறுத்துகின்றனர். சில அம்சம் நிறைந்த ஒருவராக அரவான் உள்ளார். அரவான் என்பவர் அர்ஜுனனுக்கும் நாககன்னிக்கும் மகனாக பிறந்தவர். இவரின் உதவியை நாடும்போது, ஐவரும் அதை ஒப்புகொண்டார்.

ஆனால் அவரின் இறுதி ஆசையாக ஒரு பெண்ணுடன் திருமணம் முடிந்து, அவளுடம் ஒரு நாள் இல்லற வாழ்கை நடந்த பின்பே பலிக்கு சம்மதிப்பேன் என கூறினார், ஒரு நாளில்  இறக்கும் ஒருவரை  எந்த பெண்ணும் திருமணம் செய்ய முன்வரவில்லை, எனவே கிருஷ்ணன் மோகினி அவதாரம் எடுத்து அவருடன் இல்லறவாழ்கை மேற்கொள்கிறான். பின் போர்களத்தில் முதல் பலியான அரவணை நினைத்து மோகினி அவதாரம் கொண்ட கிருஷ்ணன் அழுகின்றார்.

இந்த கதையில் அடிப்படையில் தான் கூத்தாண்டவர் கோவிலின் சடங்குகளும் நடைபெருகின்றனர். திருநங்கைகள் தங்களை கிருஷ்ணனாக பாவித்து இந்த விழாவை கொண்டாடுகின்றனர்.   

திருமண கோலத்தில் திருநங்கைகள் –

பேருந்து நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரம் தள்ளி இந்த கோவில் அமைந்துள்ளது. வருடா வருடம் இந்த சமதள நிலம் வேன்கள், பஸ்கள்,கார்கள் என நிரம்பி வழியும். இங்கு திருநங்கைகள் மட்டுமல்லாமல் சில பொதுமக்களும் வேண்டுதல்காக வருகின்றனர். திருநங்கைகள் புது பட்டு புடவைகள் , தங்க நகைகள், கவரிங் நகைகள் , கை நிறைய வளையல்கள் தலையை மறைக்கும் அளவு பூ வைத்து மணப்பெண் போன்று அலங்கரித்து வந்த வண்ணம் இருந்தனர். பலர் செலவு செய்து அலங்காரம் செய்து ஆடம்பரமகா தங்களின் திருமண விழாவை நடத்தினர்.  கோவில் பூசாரிகளின் கைகளில் திருநங்கைகள் தாலி கட்டி கொண்டனர். அதிகபட்ச திருநங்கைகள் வயதான பூசாரியிடம் தாலி கட்டி கொள்கின்றனர். அவர்களை கடவுள்களாக

 காண்கின்றனர். திருமணமான மகிழ்ச்சியில் பெரிய கற்பூரம் நெருப்பு நடுவில் பெரிய வட்டமிட்டு கும்மி பாட்டுடன் கைதட்டி ஆட்டம் போட்டு மகிழ்ந்தனர்.  பின் திருமண கோலத்திலே அருகில் உள்ள கிராமத்திற்கு வளம் வந்தனர். அங்கு கூடிய இளைஞர்கள் திருநங்கைகளுடன் செல்பி எடுத்தனர். எங்கு பார்த்தாலும் சிரித்த முகத்துடன் திருநங்கைகள் வலம் வந்தனர். பெரிய சப்தங்கள் கொண்ட கை தட்டல்களுடன் திருநங்கைகள் ஆரவாரமாக இருந்தனர்.

அன்றிரவு, அவர்களுக்கு முதல் இரவு சடங்கு என்று ஒன்று வைத்திருகின்றனர். அவர்களுக்கு விருப்பமான ஆண்களுடன் உடலுறவு வைத்து தங்களின் சடங்குகளை முடிகின்றனர். இதில் சிலர் அப்படி எந்த ஒரு கட்டாய சடங்குகளும் இல்லை, தேவையானவர்கள் அதை நடத்தி கொள்வார்கள், இங்கு வரும் 90 சதவீத ஆண்கள் பெரும்பாலானோர் அதற்காகவே வருகின்றனர். சில திருநங்கைகள் அவர்கள் வரும்போதே தங்களுக்கு விருப்பமான ஆண்களை அழைத்து வருகின்றனர், அவர்களின் கையாலே தாலி கட்டி கொள்கின்றனர். அவர்களுடனே உடலுறவும் வைத்து கொள்கின்றனர். இரவில் எங்கு கண்டாலும் இந்த நிகழ்வு நடைபெற்று கொண்டிருந்தன.

தாலி அறுத்து ஒப்பாரி வைத்த திருநங்கைகள் –

முன்தினம் தாலி கட்டி கொண்டதை அடுத்து விடிய விடிய மகிழ்ச்சியுடன் கும்மி அடித்து கொண்டும், சந்தோஷமாக இருந்த திருனங்கங்களின் மகிழ்ச்சி முடிவுக்கு வந்தது,  தேர் நாளான இன்று திருநங்கைகள் தேர் முன்பு கர்பூரம் ஏற்றி வழிபட்டனர். பின் தானியங்களை அந்த தேர் மீது எறிந்தனர். அந்த தேரை கண்டு பல திருநங்கைகள் கதறி அழுதனர். தங்களின் நெஞ்சில் இடி போன்று குத்தியும், தட்டியும் ஒப்பாரி வைத்து அழுதனர்.

பின் தங்களின் தாலியை அறுத்தெடுத்து, வளையலை உடைத்து , மஞ்சள் குங்குமத்தை அழித்து கொண்டு, வெள்ளை புடவை அணிந்து கதறி அழுகின்றனர்.

பின் தொடர்ந்து ஒப்பாரியுடன்  நேற்று அவ்வளவு சந்தோஷமாக இருந்த கூத்தாண்டவர் கோவில் பகுதி இன்று அங்காங்கே ஒப்பாரி கூவலுடன் அழுகின்றனர். பார்பவரையும் அழுகை வரவைக்கும் அளவு இருந்தது அந்த ஒப்பாரி.  மகாபாரத கதையில் கிருஷ்ணன் அழுதை கொண்டு இது சடங்காக தொடர்து செய்து வருகின்றனர். ஒரு உண்மையான நெருக்கமான மனிதர் இறந்து போனால் எப்படி அழுவாரோ அந்த அளவு இங்கு இவர்கள் அழுதனர். 13நாட்களின் சந்தோஷம் இறுதியில் அழுகையுடன் முடிந்தது. தாலி அறுத்து வெள்ளை புடவை அணியும் இவர்கள் மூன்று நாள் விரதம் இருந்து, அதே விதவை கோலத்தை தொடர்ந்து இருப்பார்கள். பின் மூன்று நாட்களுக்கு பின் தங்களின் சாதாரண வாழ்கையை தொடர்கின்றனர்.

இங்கு  திருநங்கைகளின் பிரச்சனைகள்-

இங்கு திருநங்கைகளுக்கு மட்டுமல்லாமல் பொது மக்களுக்கும் இருக்கின்ற பொதுவான பிரச்கனையாக கழிவறை பிரச்சனை தான். ஒட்டு மொத்த திருவிழா பகுதியில் ஒரே ஒரு கழிவறை கட்டிடம் மட்டும் தான் அது பெரும் அவஸ்தையாக உள்ளது என அங்கு வருபவர்கள் கூறுகின்றனர்.  மற்றும் திருநங்கைகளுக்கு போதிய பாதுகாப்பு அங்கு இல்லை, அவர்கள் அணிந்து வரும் நகைகளுக்காக அவர்களை மிரட்டி வழிப்பறியும் செய்கின்றனர். இது பல ஆண்டுகளாக இது தொடர்ந்து நடைபெறுகிறது, திருவிழாவிற்கு வரும் ஆண்கள் சிலர் கைகளை பிடித்து இழுகின்றனர், மார்பகத்தை தொடுகின்றனர் என கூறுகின்றனர். இங்கு வரும் பெரும்பாலான ஆண்கள் வக்கிர புத்தியுடன் தான் வருகின்றனர் என்று கூறுகின்றார் திருநங்கை செல்வி மற்றும், அங்கு சில நேரம் சலசலப்பு ஏற்பட்டது, கூத்தாண்டவர் கோவிலுக்குள் செல்ல நுழைவு சீட்டு ருபாய் 5 , அதை வாங்கி பலர் வரிசையில் நிற்கின்றனர். அனால் சிலர் கோவிலின் பின் பகுதியின் வழியே நுழைந்து செல்வதால் அந்த இடத்தில் சில நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

திருவிழா பற்றியான சிலரின் கருத்து

 திருநங்கை. மனிஷா

பல வருமானம் வந்தம் வண்ணம் இருந்தாலும் இங்கு சரியான வசதிகள் இன்று வரை கை சேரவில்லை, வாகனம் நிறுத்தி வைக்க ஒரு இடம் அமைத்த்தால் வசதியாக இருக்கும், இதனால் தான் இங்கு பல முறை சாலை நெரிசல் ஏற்படும். அனைத்து வசதியும் இங்கு உள்ளது குடிநீர் வசதியை மேலும் மேம்படுத்தினால் உதவியாக இருக்கும்.

கார்த்தி (பள்ளி மாணவன்)

மூன்றாவது வருடம் இந்த வேண்டுதலை செய்து வருகிறேன், நல்லாத்தான் இருக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

முத்துசெல்வன் (சமூக ஆர்வலர்)

 எய்ட்ஸ் சிகிச்சை தற்போது பலர் தாமே முன் வந்து ஏற்று கொள்கின்றனர். அது சந்தோஷம், எங்களை போல சேவை செய்பவருக்கு ஒரு நிழற்குடை அல்லது ஒரு தற்காலிக இடம் அமைத்து தந்தால் நன்றாக இருக்கும்.

திருவிழாவில் அரசின் பங்கு

திருவிழாவிற்கு மக்கள் செல்வதற்காக பல இடங்களில் இருந்து கூவாகத்திற்கு சிறப்பு பேருந்துகள் விடப்படுகின்றன.  பேருந்து நிலையத்திலிருந்து கூவாகம் கோவில் வரை போலீஸ் பாதுகாப்புகள், வெளி ஊரிலிருந்து வருபவர்களுக்காக அரசு பொது கூடம், நூறு மீட்டர் இடைவெளியில் குடிநீர் வசதி, என அமைத்துள்ளது, மற்றும் அங்கு வருபவருக்களுக்கு ஏதேனும் எச்.ஐ.வி  பாதிப்பு உள்ளதா என சோதிப்பு முகாம்கள், அதற்கான சிகிச்சை அறிவுரைகள் வழங்கபடுகின்றனர். அதுமட்டுமல்லாமல் உடலுறவு கொள்பவருக்காக ஆணுறை பெட்டி அமைக்கப்பட்டுள்ளது.

மிஸ். கூவாகம்

தாலி கட்டும் நாளிற்கு முன் தினம் திருநங்கைகளின் உள்ளே  மிஸ் கூவாகம் என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல அழகி திருநங்கைகள் பங்குபெற்றனர். இந்த நிகழ்வு வருடா வருடம் நடைபெற்று வருவது குறிப்பிட தக்கது . இந்த விழாவை தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு சங்கம் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், மாவட்ட அரசு நலத்துறை ஆகியவை இனைந்து நடத்தியது. இதில் பலவேறு பகுதிகளிலிருந்து வந்த திருநங்கைகள் பங்குபெற்றனர்.  இந்த நிகழ்ச்சியில் சென்னையை சேர்ந்த திருநங்கை மொபிணா என்பவர் மிஸ் கூவாகம் என்ற பட்டதை வென்றார். இரண்டாவது இடத்தை சென்னை போரூரை சேர்ந்த ப்ரீத்தி என்ற திருநங்கை வென்றுள்ளார்.

 வருடா வருடம் இந்த திருவிழாவில் பங்கேற்கும் திருநங்கைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டுதான் வருகின்றது , இதற்கான காரணம் பற்றி, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த  திருநங்கை. மனிஷா விடம் கேட்ட போது,

“முன்பெல்ல்லாம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா மிகுந்த பக்தியுடன், சம்பிரதாயம் மாறாமல் நடைபெற்று வந்தது, அனால் இப்போது அப்படி இல்லை பலரிடம் பக்தி குறைந்து விட்டது.

இன்று முக்கிய திருநங்கைகள் கூவகதிற்கு வருவது இல்லை காரணம், கூவாகத்தில் பாலியல் வக்கிரங்கள் அதிகரித்து விட்டது, பல முறைகளில், பல சூழ்நிலைகளில் எங்களை போன்ற திருநங்கைகள் பாலியல் தொந்தரவுகளை பார்த்ததுண்டு, ஆனால் இங்கு தான் மோசமான முறையில் துன்புறுத்தல் பார்க்க முடிகிறது. கூவகத்தை விட்டு விட்டு பலர், திருவண்ணாமலை, புலியூர் குப்பம் போன்ற இடங்களுக்கு செல்கின்றனர்.” என்றார்.

 

நிகழ்ச்கிகள்

முதல் 16 நாள் விழாவின் போது, பாடல்கள், நடனம் என கூவாகம் கலை கட்டி நிற்கும். இதன் இடையே திருநங்கைகளே அதிகளவு அனைத்து போட்டியிலும் பண்கேப்பர்கள், அரசு சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நாடகமும் நடைபெறுகிறது.

17 நாள் தாலி கட்டுவது, பின் கடைசி நாளில் தாலி அறுபது. இதனிடையே பீஷ்மர் பிறப்பு, அரவான் பிறப்பு, பாஞ்சாலி திருமணம், தர்மர் பிறப்பு, கால பலி ஒப்புகை என பல நாட்கள் அங்கு சடங்குகளுடன் நிகழ்த்தப்படுகின்றன.முதல் வருடம் தாலி கட்டினால் மஞ்சள் கட்டை தாலி, இரண்டாம் ஆண்டு தாலி கட்டினால் வெள்ளி, மூன்றாம் முறை தங்கம் என திருமண ஆண்டை படிநிலை படுத்தி வைத்திருகின்றனர்.தங்களுக்கென பெண் வழி குடும்பமாக அம்மா, மகள், பேத்தி என உருவாக்கி குடும்பத்துடன் ஒன்றி இங்கு வருகிறார்கள்.

இப்படி பல சந்தோஷங்களையும், துக்கதையையும் மதன்களைகடந்து காலம் காலமாக தங்களின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு இந்த திருவிழாவை கொண்டாடுகிறார்கள்.திருநங்கைகளின் வாழ்க்கையில் பல இன்னல்கள் குடும்பம் சார்ந்து, சமூகம் சார்ந்து சந்தித்து வந்தாலும் தங்களின் பெருமையான நாளாக சித்திரை நாட்களை நினைகின்றார்கள், இங்கு சிலர் முழுவதும் திருநங்கையாக மாறாமல் குடும்பத்துடன் வெளியூரிலிருந்து வந்து, இந்த இடத்தில் பெண் வேடமிட்டு அவர்களின் சுதந்திரத்தையும் அனுபவிக்கின்றனர். அனால் இவர்களை பொறுத்த வரை முழு திருநங்கையாக மாறி தாலி கட்டுபவரே அரவானின் மனைவியாவர் என்கின்றனர்.

 

-       விஜய் தேசிங் 

 

        

             

 

 

 

 

 

 


 

 

 

 

Thursday, March 24, 2022

நீல புரட்சி யாருக்கு ? - பாகம் 1





மீனவர்களின்
வருவாயை இரட்டிப்பாக்க மீன்வளத்தை மேம்படுத்துதல், நிர்வகித்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவை முக்கிய நோக்கமாகவும் அதன்மூலம்  பொருளாதார வளர்ச்சியும் உருவாக்க வேண்டும் என்று 1985 90 காலத்தில் தமிழகத்தில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த ‘நீல் கிராந்தி எனப்படும் நீல புரட்சி.

1. 2020 ஆம் ஆண்டுக்குள் உற்பத்தியை மூன்று மடங்கு உயர்த்த வேண்டும்.
2.புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்முறைகளைப் பயன்படுத்தி
மீன்பிடித் துறையை நவீன தொழில்துறையாக மாற்றுதல்.
3.வருவாயை அதிகரிப்பதில் மீனவர்கள் மற்றும் மீன் பண்ணையாளர்களின் 
பங்களிப்பை உறுதி செய்தல்.
4.2020 ஆம் ஆண்டிற்குள் ஏற்றுமதி வருவாயை மூன்று மடங்காக உயர்த்துவது.
5.நாட்டின் ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துதல்.

போன்ற நோக்கங்களுடன் கொண்டுவரப்பட்ட இத்திட்டம் இன்று இதன் விளைவாக 50 ஆண்டுகளுக்கு முன்பு 60,000 டன்கள் மீன் உற்பத்தி என்ற வரம்பிலிருந்து 1.6 மில்லியன் டன் மீன்கள் உற்பத்தியை எட்டியுள்ளது. மீன் மற்றும் மீன் பொருட்களின் உற்பத்தியில் உலக சராசரியான 7.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், இந்தியா 14.8% சராசரி ஆண்டு வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்த வளர்ச்சி ஒருபுறம் இருக்கையில் இதனால் ஆரம்பத்தில் பயனடைந்தவர் ஏராளாம் அதன் பின் நடந்தது என்ன?

மீன் தொழில் முறைகளை நவீனமயமாக்கி அங்கிருந்து மீனவர்களின் வாழ்வியலில் நவீனத்தை புகுத்திய இந்த நீல புரட்சி மீனவர்களிடம் நைலான் வலைகள் மற்றும் விசைப்படகுகளை முன்வைத்து வாங்குமாறு மீன் வளத்துறை நிர்பந்தித்தது. இந்த தொழில் வளர்ச்சி காரணமாக உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளால் உற்பத்தி செய்யப்பட்ட சாதனங்களை வாங்கி கடனாளி ஆனது தான் இந்த திட்டத்தின்  முடிவாக இருந்தது. அது மட்டுமா இந்த திட்டத்தின் மூலம் பல கருவிகள் வாங்கப்பட்டு அதன் மூலம் மீன் தொழில் செய்த மீனவர்கள் கடல் வளத்தை அவர்களுக்கு தெரியாமல் அழித்ததும் இந்த நிகழ்வில் அரங்கேறியது தான். (உ.தா) இரட்டை மடி வலை.

முன்பு நான் செய்த கள ஆய்வு மற்றும் நேர்காணலில்  தமிழ்நாட்டில் மீன்பிடி தொழில் செய்யும் பலர் இரட்டை மடி வலை, சுருக்கு வலை பயன்படுத்தி மீன்களை அள்ளி செல்கின்றனர். இந்த வலையினால் மீன்கள் அதிகம் கிடைக்கின்றது என்பது உண்மை தான், ஆனால் சரியாக வளராமல் இருக்கும் மீன் குஞ்சுகளையும் பொரிய தயாராக இருக்கும் முட்டைகளையும் மொத்தமாக சுருட்டி எடுத்து கொள்கின்றது இதனால் மீனவர்கள் மாதத்தில் முதல் வாரம் கிடைக்கும் வருமானம் இரண்டாவது மூன்றாவது வாரம் கிடைக்காமல் போகின்றது காரணம் மீன் வளத்தை ஒரேடியாக எடுப்பதினால். மேலும் இது போன்ற வலைகள் மீன்களை மட்டுமல்ல மீன்களின் வாழ்வாதரமான கடல் தவாரங்களையும் அழிப்பதால் மீன்களின் பெருக்கம் குறைந்துள்ளது என்று ஆய்வில் தெரிய வருகின்றது. அண்டை நாடான இலங்கையிலும்  பெரும்பாலான பொருளாதாரம் மீன் தொழிலை சார்ந்தே உள்ளது அங்கு மீன்வளத்துறை இரட்டை மடி வலை பயன்படுத்துவது குற்றமாக அறிவித்துள்ளது மேலும் அந்த நாட்டு மீனவ இனகுழுவும் அந்த வலைகளை பயன்படுத்துவதில்லை.  

மேலும் நீல புரட்சியில் எந்திரங்களை வாங்க வேண்டிய சூழலால் முதலீட்டுக்கு கடன் வாங்கும் சூழலில் மீனவர்கள் தள்ளப்பட்டு பெரும்பாலான மீனவர்கள் கடனாளியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.கண்ணாடியிழைப் படகுகள், பிளாஸ்டிக் கட்டுமரங்கள், ஸ்டீல் படகுகள் மற்றும் இயந்திர மோட்டர்களையும் அறிமுகபடுத்தி அதன் வளர்ச்சியை உருவாக்கிய இந்த நீல புரச்சி,  மரபு மாராமல் தொழில் செய்ய தேவைப்படும்  கட்டுமரங்கள், பாய்மரப்படகுகள், நாட்டுப் படகுகளைத் தங்கள் கைத்தொழில் நுட்பத்தால் உருவாக்கிய மீனவக் கலைஞர்களையும் கைவினையாளர்களையும் நீலப்புரட்சி அழித்தது.

‘நாட்டின் முதுகெலும்பு விவசாயம்’ என்று மகாத்மா சொன்னது விவசாயத்தை மட்டுமல்ல உணவை விளைவித்து அதனை உற்பத்தி செய்தும் இயற்கையில் கிடைக்க கூடிய உணவுகளை சேகரிக்கும் தொழிலையும் குறிக்கும். அந்த வகையில் மீன் தொழிலும் நாட்டின் முதுகெலும்பாகவே உள்ளது.

விவசாயத்தை போலவே இந்தியாவில் பல தொழில்கள் கவலைக்கிடமாகவே உள்ளது. இதில் மீன் தொழில் ஒன்றும் விதிவிலக்கல்ல. மீனவர்களின் வாழ்வாதாரத்தை சுரண்டுவதும் அவர்களை கடனாளியாக மாற்றுவதே அரசு மற்றும் பெரிய முதலாளிகளின் வேலையாக இருந்து வருகிறது. மக்களுக்கு பயன்படாத சட்டம் பயனற்றது. மேலும் மக்களுக்கு ஆரம்பத்தில் பயனளித்து பின்னாளில் சுமையாக மாறும் அரசு திட்டங்கள் கண்காணிக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதே உழைக்கும் மக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்தியாவில் நீல புரட்சி போன்று பல புரட்சிகள் துவக்கத்தில் இருந்ததை காட்டிலும் இன்று கேட்பாரற்று உள்ளது. இந்த நேரத்தில் பிரபல நடிகர் புரூஸ் லீ – ன் பொன்மொழியை நினைவு கூற விரும்புகிறேன்.

“ஒரு வேலையை துவங்குவதற்கு முன் அதில் வைக்கும் ஆர்வத்தை விட அந்த வேலையை துவங்கிய பின் வைக்கும் அக்கறையே வெற்றியை தீர்மானிக்கும்”


- விஜய் தேசிங்

 

 

 

 

 

 

 

 

 

Friday, November 26, 2021

சுருளி திரைப்படம் - தமிழ் விளக்கம்

இதுல யாரு மாடன்? யாரு திருமேனி? 


ஒரு குற்றவாளியை பிடிப்பதற்கு சுருளி மலைக்கிராமத்தில் மஃப்டி ல் நுழையும் இரண்டு போலீஸ். சுருளி கிராமத்தில் தொடர்ந்து நடைபெறும் அமானுஷ்ய சம்பவங்கள். இதனிடையே குற்றவாளியான ஜோயை போலீஸ் அதிகாரிகள் பிடித்தார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் மொத்த திரைக்கதையும்.

படம் ஆரம்பத்திலே ஒரு கட்டுக்கதையை சொல்லிவிட்டு பின் திரைக்கதையை துவங்க. ஆரம்பத்தில் சொன்னதையடுத்தே திரைக்கதையும் நகர்ந்தது. 

மிகவும் குழப்பமான திரைக்கதை. தலையும் இல்லை வாலும் இல்லை..அப்படி இருந்தால் இது ஒரு Time Loop என்று எடுத்து கொள்ளலாம். அப்படி இல்லையென்றால் இது ஒரு Mystery Thriller ஆகவும் எடுத்துக் கொள்ளலாம். 

படத்தில் தேவையற்ற காட்சிகளோ, வசனங்களோ இடம்பெறவில்லை. வைக்கப்பட்டுள்ளவை எல்லாம் இன்னொரு விஷயங்களுக்கு தொடர்புடையதாக இருக்கின்றது.

குறிப்பாக படத்தின் இறுதி காட்சியில் ஜோய் சொல்லும் கதை பின் நடைபெறும் சம்பவம் இருமாதிரியான கதைக்கருவை நம்மிடம் விட்டு செல்கிறது. 

அதற்கு முன்பு ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் பின்னணி இசை படத்தை வேறுமாதிரியான பரிணாமத்திற்கு கொண்டு சென்றதற்கு அவர்களே முழுமுதற் காரணம். மேலும் படத்தில் நடித்த முன்னணி கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் உடன் நடித்தவர்களின் பங்கும் அளப்பரியது. 


சரி கதைக்கு செல்வோம். முன்பு சொன்னது போல இரண்டு விதமாக இந்த படத்தை எடுத்து கொள்கிறேன்.


ஒன்று..

திருமேனியின் கதையை வைத்து படத்தில் யார் திருமேனி, அவரை வழி மாற்றிவிடுகிற மாடன் யார் என்ற கோணத்தில் இந்தப் படத்தை நாம் எடுத்துக் கொள்வோம். 


ஜோய் மீது சொல்லப்படும் அனைத்து குற்றங்களையும் ஷஜீவன் செய்திருக்கிறார். அவர் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு போலீஸ் அதிகாரியை இந்த சுருளி கிராமத்தில் கூட்டி வந்து அவர்களின் நோக்கத்தை மாற்றி அழைத்து செல்கிறான். தொடர்ந்து இதே போல செய்வதால் ஷஜீவனின் நினைவுகளாக அந்த கிராம மக்களின் செய்கைகளும் ஷஜீவனை சார்ந்தே இடம்பெறுகிறது. மேலும் கிராமத்தில் இடம்பெறும் அமானுஷ்யங்கள் எல்லாம் ஷஜீவன் பார்வையிலே நடைபெறும். 

போலீஸ்காரர்களுடன் போலீசாகச் சேர்ந்து அவர்களை ஒவ்வொரு முறையும் வழி தப்பிவிடுகிற மாடனாக ஷஜீவன் இருக்கிறார். 

மேலும் போலீஸ் ஆன ஆண்டனி , வந்த வேலையை விட்டு திசை திரும்பி குடி, இறைச்சி என்று அங்கேயே எடுபுடி வேலையாட்களாக மாறிவிடுவார். அதே போல மருத்துவ பெண் "நீங்கள் போலீஸ்" தானே என்று சொல்வார். அது அமானுஷ்யங்கள் இல்லை. 

ஏற்கனவே நிறைய முறை அங்கு போலீஸ் உடல் நலம் குன்றி வந்திருக்கிறார்கள். அவர்களை குணப்படுத்தி அனுப்பிருக்கிறார் அவர். மேலும் ஊர் மக்கள் ஆண்டனியை மட்டுமே கொல்ல வருவார்கள். 

இது போல பார்க்கையில் ஒட்டுமொத்த கிராமத்தினரிடம் ஆண்டனி மட்டுமே சிக்கியிருக்கிறார். இதை உணராமல் அவரை ஒரு சுழற்சி எண்ண ஓட்டத்தில் வைத்திருப்பவர் ஷஜீவன்.


மேலும் ஜோய் வீட்டுக்கு சென்று ஆண்டனி சொல்வது. "வனவிலங்குகளை கொல்வது, ஆண் பிள்ளைகளை பாலியல் தொந்தரவு செய்வது, கொலை செய்வது" என குற்றங்களை அடுக்குவார்.

ஒரு காட்சியில் ஷஜீவன் வனவிலங்கை வேட்டையாடுவார். அதில் அவரது மும்முரம் அதிகமாக இருக்கும். பின் மருத்துவச்சி வீட்டில் ஆண் பிள்ளையை வன்புணர்வு செய்திருப்பார். திருவிழாவில் போட்டியிட்டவரை கொன்றது" என ஷஜீவனை ஜோய் உடன் ஒன்றியே நகர்த்தியிருப்பார்கள்.

இறுதிக் காட்சியில் ஜீப்பில் ஜோய் இருந்த இடத்தில் ஷஜீவனை காட்டுவது இந்த கூற்றை உறுதிபடுத்துகிறது. 

அதாவது ஜோய் என்ற ஒருவன் இல்லை. ஜோய் என்பவன் தான் ஷஜீவன். அந்த கிராமத்தில் ஒருவருக்கு வெவ்வேறு பெயர் இருப்பதை இரண்டு மூன்று இடங்களில் உறுதிபடுத்தியிருப்பார்.‌

அப்படி பார்க்கையில் ஷஜீவன் தான் ஜோய், ஜோய் தான் ஜார்ஜ், ஜார்ஜ் தான் ஷஜீவன்.

கதை சொல்லி முடிக்கும் போது ஒரு அகங்கார சிரிப்பு வரும். அதே போல ஜோய், ஷஜீவன் , ஆண்டனியும் சிரிப்பார்கள்..


இரண்டாவது கரு கூற்று : 

துவக்கத்தில் வரும் திருமேனி வேறுயாரும் இல்லை. படம் பார்க்கும் நாம் தான். மாடனாக சுருளி திரைப்படம் இருக்கிறது. அடர்ந்த வனமாக திரைத்துறை உள்ளது. 

திருமேனியின் தலையில் ஏற்றிய காலி கூடையை போல நம் மூளையையும் திறந்து வைத்து படம் பார்க்கிறோம். கதை எங்கு போகும் என்றே தெரியவில்லை. ஆனால் நம்மை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வழி தப்பி கொண்டே இருக்கிறது. 

இது போன்ற இரண்டாவது கூற்றையும் வைக்க முடியுமே தவிர வேறுமாதிரியான அர்த்தங்களையோ பிரதிபலன்களையோ வைக்க முடியாது. படம் ஒரு Science fiction, Time loop, Mystery Thriller என பிரித்து கொள்ளலாம்‌. 😂😂😂 


என்னை பொறுத்தவரை சுருளி திரைப்படம் விமர்சனத்தை வைக்கும் விமர்சகளையும் திரைக்கலைஞர்களையும் சுற்றியே நடைபெறுகிறது. 

ஒரு கலை என்பது அடர்ந்த வனம் (சுருளி கிராமம்) அதில் இறுதி காட்சியில் ஜோய் சொல்வது போல மான், மயில், குடி, இறைச்சி, வெடி உண்டு. ஏன் பெண் கூட உண்டு இங்கு கொலை கூட செய்யலாம். அதாவது சுதந்திரமாக வாழலாம். இதை அனுபவிக்காமல் முன் அனுமானங்களுடனும் தீர்மானங்களுடனும் இங்கு நுழையாதீர்கள். 

அதே போல ஒரு படைப்பு என்பது எண்ண ஓட்டத்தை தாண்டி அனுபவத்தை கொடுக்ககூடியது. அதிலிருந்து அறிவுரையோ நீதியையோ எடுத்து சொல்ல வேண்டும் என்று நிர்பந்திக்க வேண்டியதில்லை. 

அப்படி தேடி போகையில் நாமும் அதில் தொலைவோமே தவிர அதிலிருந்து வெளிவர முடியாது..

ஹா... ஹா.. ஹா.... ஹா... 


- விஜய் தேசிங் 




Sunday, October 3, 2021

மோகன் ஜி - ன் ருத்ர தாண்டவம் ஒரு பார்வை



பட்டியலின இளைஞரை தாக்கி அவர் இறந்து போக காவல் ஆய்வாளரான ருத்ரன் ( #RichardRishi ) மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்(PCR act) கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. 

ஒருகட்டத்தில் இறந்த இளைஞன் 
பட்டியலினத்திலிருந்து மதம் மாறியவர் என்பதால், தன் மீது இருந்த வழக்கு செல்லாது என அதற்கு எதிராக ஆய்வாளர் ஒரு வழக்கைத் தொடர்கிறார்.

அந்த வழக்கிலிருந்து தப்பித்தாரா இல்லையா? என்பதும் இதற்கு நடுவில் போதை பொருளுக்கு இளைஞர்கள் அடிமையாவது அதை தடுக்க ரிச்சர்ட் ரிஷி எடுக்கும் நடவடிக்கைகள் தான் 
படத்தின் மீதிக்கதை. 


கிருஸ்தவ மதத்தினர் மற்ற மதத்தினரை மதம் மாற்றுகிறார்கள் என்று ஒரு கருத்தியல் இருக்கு..

ஒரு மதத்திலே இருக்கறதும் ஒரு மதத்தின் கலாச்சாரம், வன்கொடுமை, ஒடுக்குமுறை தாங்காமல் மற்றொரு மதத்திற்கு மாறுவதும் அது அவரவர் விருப்பம். இது ஜனநாயக நாடு. 

கதையில் இளைஞன் மாறினான் என்பதற்கு பொதுவாக அந்த மதத்தை விமர்சிப்பது எந்த விதத்தில் நியாயம்? 

இந்திய சட்டம் சிறுபான்மையினருக்கு ஆதரவாக நிறைய சட்டங்கள் இயற்றியுள்ளது அதில் சிலவை மட்டுமே சரியாக பயன்படுகிறது. அப்படி பயன்படும் PCR ACT - ஐ சரியான புரிதல் இல்லாமல் தற்குறியா இயக்குனர் இந்த கதைய எழுதிருக்காரு.  

வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தபடுகிறது என்ற சிறிய நிகழ்வுகளை வைத்து ஒட்டுமொத்த வரைவுகளையும் கொச்சைபடுத்துவது அபத்தம். 

படத்தில் சட்டத்தை திருத்தி எழுதவும் அதற்கு குழு போடவும் நீதிபதி முடிவு சொன்னாலும்.. படம் பார்த்து வெளிவர மக்களுக்கு அந்த சட்டம் தவறானது என்ற எண்ணத்தையே கொடுக்கிறது. 

The Civil Rights Act of 1964 prohibits discrimination on the basis of race, color, religion, Caste, sex or national origin

சமூக நல்லிணக்கத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்க கூடிய சாதி, மதம், இனம் பாகுபாடுகளை தடுக்க வன்கொடுமை தடுப்பு சட்டம் இயற்றப்பட்டது. 

இதை சாதாரணமாக கடந்து போக கூடிய சட்டம் இல்லை. இது இந்தியாவின் சமூக நல்லிணக்கத்தை ஓரளவு காப்பாற்றி வருகிற சட்டம். அதை பொதுவெளியில் வேறுமாதிரி சித்தரிப்பது எந்தவகையில் சரியாக இருக்கும். 


மேலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை கதைக்கு ஒட்டாமலே காட்டமாக தாக்குவதும் சித்தரிப்பதும் அருவருப்பை கொடுக்கிறது. 

அதுவும் #YGMahendran #RadhaRavi மூலமாக அந்த வசனங்களை கொடுப்பது இன்னும் மோசமாக இருக்கிறது.

இன்னும் எத்தனை காலத்துக்குடா வடசென்னை மக்களை போதை பொருள் கடத்தல்காரர்களாகவும், கொலை கொள்ளை கட்டப்பஞ்சாயத்து பன்றவங்களாகவும் காட்டுவீங்க..

ச்ச ச்ச ச்ச நச நசநசனு.. காட்சிக்கு காட்சி.... இதுல ஈழம் வேற தமிழ்சினிமா நடுவுல மாட்டிக்குட்டு இருக்கு..

இதுல குறியீடு லட்சனம்.. தமிழ்சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக குறியீடு என்ற பெயரில் இயக்குனர் அதை சிந்திப்பதும் பார்வையாளர்கள் அதை தோண்டி எடுப்பதும் வாடிக்கையாக உள்ளது. 
இந்த படத்திலும் குறியிடு ன்ற பேருல போட்டோ கடை வெச்சிருக்காரு இயக்குனர். 

அண்ணா துரை, காமராஜர், வாஜ்பாய், நேதாஜி, காந்தி, அம்பேத்கர், பாரக் ஒபாமா, ஜான் எஃப் கெனடி, பாரதியார்,

வசனங்களில் முத்துராமலிங்கம் ஐயா புகைப்படமும் வெச்சிருக்காரு (இன்னும் அடையாளம் காணமுடியாத சிலரின் புகைப்படமும்) 

கதை வில்லனுக்கும் கதாநாயகனுக்கு நடக்கும் ஒரு Tom & Jerry Concept னும் சொல்ல முடியாது. 

ஏன்னா வில்லன் எப்போனா தான் வருவாரு. அப்பறம் கடைசில செத்து போயிடுவாரு.. 

முதல் பாதியில் சட்ட ஒழுங்கை காப்பாற்றும் கதாநாயகன் இரண்டாம் பாதியில் தன்னையும் தன் நல்ல பெயரையும் காப்பாற்ற போராடுகிறார் இதுதான் படத்தோட கதை. 


திரைக்கதை ரொம்பவே மெதுவாக நகர்கிறது. மோலோட்டமாக பார்த்தால் படம் சுமாரான படம். இயக்குனரின் முந்தைய படங்களை விட இந்த படங்களில் Technically Improvement இருக்கு.‌

பிண்ணனி இசை நல்லா இருக்கு.. ஆனா சில இடங்களில் அது அடிக்கடி வருவது போல இருக்கு.. 
ஆனா குறை சொல்ல அது இங்க பிரச்சனை இல்லை..

பூனைக்கு கோடு வரைஞ்சா பூனை னு தான் சொல்ல முடியும் புலி னு சொல்ல முடியாது. 

அது போல தான் என்னதான் improvement இருந்தாலும் Data & Information எடுக்குறதுல இயக்குனர் இந்த முறையும் கோட்டவிட்டுருக்காரு. 

மேலோட்டமான தகவல்களை வைத்தும் வாட்ஸ் ஆப் ல் வலம் வரும் விஷம கருத்துக்களுக்கு கோபபட்டு இந்த படத்தை எடுத்தது போல இருக்கு. 







துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல.. - மருது சகோதரர்கள் வீழ்த்தப்பட்ட கதை

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல..  என்ற வரலாறு ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி துரோகத்தால் வீழ்த்தப்பட்ட ம...