freelancing writer

My photo
Am Freelance in any Area !

Sunday, August 1, 2021

தந்தைக்கு முலைப்பால் கொடுத்த மகள் : ரோமன் சாரிட்டி எனும் கதை

              ரோமன் சாரிட்டி ஓவியம் 



சமீபத்தில் கே.பாலசந்தர் அவர்களின் கல்கி திரைப்படம் பார்த்தேன். 

வழக்கமாக பாலசந்தர் படங்களில்   உலக சினிமாவை பற்றியோ உலக இலக்கியங்களை பற்றியோ அல்லது நடப்பு அரசியல் குறித்தோ ஒரு துணுக்குகளை திரைக்கதையில் அவர் வைப்பதுண்டு.. அப்படியே இந்த படத்திலும் ஒரு துணுக்கு என்று சொல்லலாம் அல்லது தகவல் என்று சொல்லலாம்.. 


கல்கி திரைப்படத்தில் ஒரு காட்சியில் எஜமானி செல்லம்மாவிடம் பணிப்பெண் கோகிலா, 

கதாநாயகி ஒரு அந்நியனை கட்டியணைத்து முத்தம் கொடுத்ததை நியாயப்படுத்த ஒரு கதையை மேற்கோள் காட்டுவாள்.

"தாகத்தில் செத்து கொண்டிருந்த ஒரு அந்நியனுக்கு ஒரு தாய் சட்டுனு breast feed செஞ்சு காப்பாத்துனா..."  னு வசனம் வரும்.. 


இந்த கதையின் பிண்ணனியயை தேடி பார்க்கையில் ரோமன் சாரிட்டி என்னும் ரோம் நாட்டின் கதை உதாரணமாக கிடைத்தது. 

அக்கதை, ரோமில் சிமோன் எனும் குற்றவாளிக்கு பட்டினி கிடந்து சாகுமாறு தண்டனை விதிக்கப்படுகிறது. தன் தந்தையைக் காப்பாற்ற பெரோ என்ற அவரது மகள்.  சிமோனை தினமும் சிறைக்கு சென்று அவரது பட்டினியை போக்க  தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றி வருகிறார். அப்படி ஒருநாள் தந்தைக்கு  பால் கொடுக்கும் போது சிறைக்காவலனிடம் பிடிபடுகிறாள். 

பின் அந்த பெண் மீது நீதிமன்றம் விசாரணை வைக்கிறது. அந்த பெண்ணின் இந்த செயல் தன்னலமில்லாத கருணையை வெளிபடுத்துகிறது என்று நீதிமன்றம் புரிந்து கொண்டு அவளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி தன் தந்தை சிமோனையும் விடுதலை செய்தது.
 
இந்த கதையை தழுவி நிறைய உதாரண கதைகள், நிறைய நவீன ஓவியங்கள் , சிலைகள் , சினிமா என ஏராளமான படைப்புகள் வந்துவிட்டது. மேலும் இந்த படைப்பு கலைக்கு ஆபாசம் இல்லை என்பதையும் வலியுறுத்துகிறது..

அதையே தான் கல்கி படமும் கூறுகிறது. இந்த சமூகம் எதை ஆபாசம் என்று கூறுகிறதோ அதை உடைத்து ஒரு செயலை வெளிபடுத்துகிறது. 

No comments:

Post a Comment

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல.. - மருது சகோதரர்கள் வீழ்த்தப்பட்ட கதை

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல..  என்ற வரலாறு ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி துரோகத்தால் வீழ்த்தப்பட்ட ம...